இலக்கியம்

உரிமைகளைக் காக்கும் வேட்கை கொண்ட நூல்

செய்திப்பிரிவு

தேசியக் கல்விக்​கொள்கை 2020 என்​பது கல்​வியை அரசி​ய​லாகப் பார்க்​கும், கல்​வி​யில் அரசி​யல் செய்ய முற்​படும் பிரி​வின​ரால் எழுதப்​பட்​டது. இது மனித குலத்​திற்கு எதி​ரானது; சமூக நீதிக்கு எதி​ரானது; அடிப்​படை உரிமை​களுக்கு எதி​ரானது; மதத்​தின் பெய​ரால் மனிதர்​களைப் பிரித்​து, அடிமைப்​படுத்​தி, நசுக்க நினைக்​கும் மதம்​பிடித்த யானை​களை ஒத்​தது என்​பதை ‘தேசிய கல்விக் கொள்கை – 2020 எனும் மதயானை’ என்ற நூல் அறி​வுப்​பூர்​வ​மாக நமக்​குப் படம்​ பிடித்​துக் காட்​டு​கின்​றது.

தமிழ்​நாடு அரசின் பள்​ளிக் கல்​வித் துறை அமைச்​சர் அன்​பில் மகேஸ் பொய்​யாமொழி இந்​நூலை எழு​தி​யுள்​ளார். மொத்​தம் 14 தலைப்​பு​களில், 135 பக்​கங்​களில் இந்​நூல் எழுதப்​பட்​டுள்​ளது. இந்​தி​யா​வில் கல்விக்​கான வளர்ச்​சிக் கட்​டமைப்​பில் சிறந்து விளங்​கும் தமிழ்​நாட்​டின் அணுகு​முறையைப் பின்​பற்​றி​னால் கல்​வி​யில் அடைய​வேண்​டிய இலக்கை ஒட்​டுமொத்த இந்​திய தேச​மும் அடைந்​து​விடலாம்.

கல்​வித் திட்​டம் என்​பது வளர்ச்​சியை நோக்கி அழைத்​துச்​செல்ல வேண்​டும். மாறாக, வீழ்ச்​சியை நோக்கி வீசி​யெறிவ​தாக இருக்​கக் கூடாது என்​கிற கவலை நூலாசிரியருக்​குள் இருக்​கிறது. 3ஆம் வகுப்​பில் பொதுத்​தேர்​வு, 5ஆம் வகுப்​பில் பொதுத்​தேர்​வு, 8ஆம் வகுப்​பில் பொதுத்​தேர்​வு, 12ஆம் வகுப்​பிற்கு பிறகு எந்த உயர் படிப்​பில் சேர வேண்​டுமென்​றாலும் அகில இந்​திய அளவில் நுழைவுத்​தேர்வு என்​ப​தெல்​லாம் கல்வி என்​பது அனைத்து மக்​களிட​மும் சென்று சேர்ந்​து​விடக் கூடாது என்ற நோக்​கத்​தையே வெளிப்​படுத்​துகிறது என்​பதை இந்​நூலின் மூலம் ஆசிரியர் நிறு​வி​யுள்​ளார்.

ஒன்​றிய அரசு வெளி​யிட்ட தேசி​யக் கல்விக் கொள்கை என்​பது, கல்விக் கொள்​கையே அல்ல. நாட்​டிலுள்ள எந்த மாநிலத்​துட​னும் கலந்து ஆலோ​சிக்​காமல், மதச்​சார்பு கொண்ட 13 அமைப்​பு​களை மட்​டும் கொண்டு உரு​வாக்​கப்​பட்ட கொள்கை இது என்று கூறுகிறார் நூலாசிரியர்.

அனைத்து மாநிலங்​களின் சுயாட்சி உரிமை​யைப் பறிப்​ப​தற்​கான முயற்​சி​யின் முன்​னேற்​பாடு என்​றும், இந்தி மற்​றும் சமஸ்​கிருத திணிப்​புக்​கான முன்​மொழிவு என்​றும் நூலில் விளக்​கி​யிருக்​கிறார் நூலாசிரியர் அன்​பில் மகேஸ் பொய்​யாமொழி. தமிழ் மற்​றும் ஆங்​கிலம் என இரு​மொழிகளில் இந்​நூல் வெளி​யிடப்​பட்​டுள்​ளது. இந்​தி​யா​வில் உள்ள அனைத்து மாநில மக்​களும் படித்​துப் புரிந்​து​கொள்​ளும் வகை​யில் அனைத்து மொழிகளி​லும் வெளி​யிடப்பட வேண்​டிய மிக முக்​கிய​மான நூல் இது.

இந்​தப் புத்​தகத்​தில் குழந்​தைப்​பரு​வம் என்​பது கற்​பித்​தலுக்​கான களமா அல்​லது போட்​டித் தேர்​வுக்​கான போர்க்​களமா என நூலாசிரியர் எழுப்​பி​யுள்ள கேள்வி இந்​நூலைப் படிக்​கும் எல்​லோருக்​குள்​ளும் எழும். ‘தேசிய கல்விக்​கொள்கை 2020 எனும் மதயானை’ என்​னும் தலைப்பே படிப்​போரை தலைநிமிர வைக்​கும். இந்​நூலைப் படித்து முடிக்​கும்​போது, மனிதச் சமூகம் எந்​தச் சூழலிலும் வீழ்ந்​து​விடக் கூடாது என்​னும் பெரும் அக்​கறையோடும், உரிமை​களைக் காக்​கும் வேட்​கையோடும் இந்​நூலில் உரத்​தக் குரல் எழுப்​பப்​பட்​டுள்​ளது என்​பது புரி​யும்.

இது தமிழ்​நாட்டு மாணவர்​களின் குரல் மட்​டுமல்ல; ஒட்​டுமொத்த இந்​திய மாணவர்​களின் குரலாக, இந்​தி​யா​வின் ஒட்​டுமொத்த ஆசிரியர்​களின் குரலாக, ஒட்​டுமொத்த பெற்​றோர்​களின் குரலாக ஒலிக்​கிறது. இந்​தக் குரல் தேசி​யக் கல்விக்​கொள்​கை​யைத் தடுத்து நிறுத்​தும். இல்​லை​யேல் நிச்​சய​மாகத் திருத்​தும்.

- சிகரம் சதிஷ்குமார் எழுத்தாளர், அரசுப் பள்ளி ஆசிரியர்

தேசிய கல்விக் கொள்கை - 2020 எனும் மதயானை
அன்பில் மகேஸ் பொய்யாமொழி
அன்பில் பதிப்பகம், சென்னை.
விலை: ரூ.300
தொடர்புக்கு: 7358500250

SCROLL FOR NEXT