இலக்கியம்

வடகிழக்கு மாநில வரலாறு | நூல் நயம்

செய்திப்பிரிவு

வடகிழக்கு மாநிலங்களான அசாம், நாகாலாந்து, மிசோரம், மேகாலயா, அருணாச்சலப் பிரதேசம், மணிப்பூர், திரிபுரா ஆகிய மாநிலங்களைப் பற்றிய வரலாற்றைச் சொல்லும் புத்தகம். இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, வடகிழக்கில் அசாம், நாகாலாந்து, மணிப்பூர், திரிபுரா ஆகிய 4 மாநிலங்கள் மட்டுமே இருந்தன.

பின்னர் பிரிக்கப்பட்டு மேலும் சில மாநிலங்கள் உருவாகின. இதில் அசாம் மாநிலத்துக்குப் பெரும் வரலாறு இருக்கிறது. அதன் கலை, இலக்கியம், பண்பாடு அனைத்தும் தாய்லாந்து நாட்டை சார்ந்தவை என்பதையும் பல்வேறு காலகட்டங்களில் அப்பகுதியின் அரசர்கள், அவர்கள் எதிர்கொண்ட போர்கள் உள்ளிட்ட விஷயங்களை, வரலாற்றுத் தகவல்களோடு விவரிக்கிறார் ஆசிரியர்.

அதே போல நாகாலாந்து, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், சிக்கிம் பிறந்த வரலாறு ஆகியவற்றைப் பேசியிருக்கிற ஆசிரியர், நேபாளத்தின் வீர வரலாறு மற்றும் வடகிழக்கு மாநிலங்களின் தேவைகள் என்ன என்பதையும் இதில் குறிப்பிட்டிருக்கிறார். பல தகவல்கள் வியப்பாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கின்றன. - அழகு

வட கிழக்கு இந்தியா
இரா. உதய்பாஸ்கர்
அசோக்குமார் பதிப்பகம்
விலை ரூ.350
தொடர்புக்கு: 9940678478

பழங்குடியினரின் உயரிய பெருமைகள்: இந்திய குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு பதவியேற்பின் அடிப்படையில் இந்த ஆய்வு நூல் எழுதப்பட்டுள்ளது. ​திரௌபதி முர்மு (2022), கே.ஆர்​.​நா​ராயணன் (1996), ராம்​நாத் கோவிந்த் (2017) ஆகியோர் நாட்​டின் இந்த உயர் பதவிக்கு வந்த​போது, பட்​டியலினத்​தவர்​களுக்கு குடியரசுத் தலை​வர் என்ற பெரு​மையை வழங்​கிய​வர்​கள் நாங்​கள் தான் என்​பவர்​களைப் பார்த்​து, “பட்​டியலினத்​தவர்​கள் அரசி​ன் உயரிய பெரு​மை​களுக்கு தகு​தி​யற்​றவர்​கள் என்று கூற வரு​கிறீர்​களா?” என்ற கேள்​வியை எழுப்​பு​கிறார் நூலாசிரியர்.

மக்​களால் தேர்ந்​தெடுக்​கப்​பட்ட ஊராட்​சித் தலை​வர்​கள் இப்​போதும் கூட தங்​கள் இருக்​கை​யில் அமர அனு​மதி மறுக்​கப்​படு​வது பற்​றி​யும் இந்​நூல் பேசுகிறது. உண்​மை​யில் பட்​டியலின/பழங்​குடி​யின மக்​கள் இந்த மண்​ணுக்​குச் சொந்​தக்​காரர்​கள் என்​பதை நிறுவ இந்த நூல் முற்​படும் விதத்​தில் புதிய ஆய்​வுப் பாதைகள் நமக்​குக் கிடைக்​கின்​றன.

வடமேற்கு இந்​திய பலூச்​சிகள் தொடங்கி இமாச்​சலின் காடிஸ், ஜார்​கண்​டின் செரோஸ், வடகிழக்​கின் நாகர்​கள், தவிர, ராஜபுத்​திரர்​கள், தென்​னிந்​தி​யா​வின் கோண்டு இன மக்​கள், பறையர் சமூகத்​தினர் என ஏராள​மான பட்​டியலினத்​தவர்​களும், விவ​சா​யம், வேட்​டை, உணவு சேகரித்​தல் மூலம் வாழ்க்கை நடத்​திய இவர்​கள் இந்​தியா முழு​வதும்பெரும் நிலப்​பரப்​பிற்கு சொந்​தக்​காரர்​களாக இருந்​திருக்​கிறார்​கள், வைதீக சமயத்தை மறுத்​ததோடு சமண, பௌத்த கொள்​கைகளை பின்​பற்றி தனித்து இயங்​கிய​னார்​கள் என்று என்​சிஆர்டி தரவு​களை முன்​வைத்து பெரும்​வி​வாதங்​களை முன்​னெடுக்​கிறார் பேரா.கேப்​டன் எஸ்​.கலியபெரு​மாள்.

அவர்​கள் அரசர்​களாக​வும் இருந்​திருக்​கும் வாய்ப்​பு​களுக்​கான கலாச்​சார, வாழ்​வியல்​பு​களை தகர்க்க முற்​பட்ட மைய நீரோட்ட சாதி, தீண்​டாமை சதி​களைப் பற்​றி​யும் இவர் தர்க்​கரீ​தி​யாக பேசிச்​செல்​லும் இந்​நூலை மிலிந்​தா பதிப்​பகம்​ வெளி​யிட்​டுள்​ளது.- பால்நிலவன்

நாடாளும் இந்தியப் பழங்குடி
பேரா.கேப்டன்
எஸ்.கலியபெருமாள்
மிலிந்தா பதிப்பகம்,
விலை ரூ.150
தொடர்புக்கு: 9176186934

SCROLL FOR NEXT