இலக்கியம்

அறிவியல் தமிழில் ஒரு மருத்துவ நூல் | நூல் நயம்

ப்ரதிமா

மனிதர்​களின் சிந்​தனை அவர​வர் தாய்​மொழி​யில்​தான் நிறை​வாக அமை​யும் என்​ப​தற்கு வலுசேர்க்​கும் வகை​யிலும் மருத்​துவ நூல்​களைத் தமிழில் எழுது​வது சாத்​தி​யமே என்​பதை மெய்ப்​பிக்​கும் வகை​யிலும் அமைந்​திருக்​கிறது ‘தலைக்​கா​யம்’ நூல். இந்த நூலை எழு​தி​யிருக்​கும் மரு. ஆ. திரு​வள்​ளுவன், அரசுப் பள்​ளி​யில் தமிழ்​வழி​யில் பயின்​றவர். சென்னை மருத்​து​வக் கல்​லூரி நரம்​பியல் அறுவை சிகிச்சை கழகத்​தின் இயக்​குந​ராகப் பணி​யாற்​றிய இவர், தலைக்​கா​யம் குறித்து பொது​மக்​கள் விழிப்​புணர்வு பெற​வும் மூளை உள்​ளிட்ட சிக்​கலான உறுப்​பு​கள் குறித்து அனை​வரும் அறிந்​து​கொள்​ளும் நோக்​கிலும் எளிய நடை​யில் இந்த நூலை எழு​தி​யிருக்​கிறார். படங்​களு​டன் கூடிய விரி​வான விளக்​கங்​கள் மருத்​து​வத் துறை சார்ந்​தவர்​களுக்கு உதவும். பள்ளி மாணவர்​களோடு அறி​வியலில் ஆர்​வம் உள்​ளவர்​களும் இந்த நூலை வாசிக்​கலாம்.

மூளை, நரம்​பு, எலும்பு தொடர்​பான அனைத்து உறுப்​பு​களுக்​கும், மருத்​து​வச் சொற்​களுக்​கும் இணை​யான ஆங்​கிலச் சொற்​களை நூலின் ஆரம்​பத்​திலேயே கொடுத்​திருக்​கிறார். 544 சொற்​கள் அடங்​கிய அருஞ்​சொற் பட்​டியலுக்​காகவே நூலாசிரியரைப் பாராட்​டலாம். மருத்​து​வம் தொடர்​பான நூல்​களைப் பொது​மக்​களால் புரிந்​து​கொள்ள இயலாது என்​கிற கற்​பிதத்​தைக் களை​யும் வகை​யிலும் இந்​நூல் அமைந்​திருக்​கிறது. நாம் புரிந்​து​கொள்ள, அறிந்​து​கொள்ள, தெரிந்​து​கொள்ள என ஒவ்​வொரு வகைமைக்​கும் இதில் தகவல்​கள் உண்​டு.

தமிழகத்​தில் 2023ஆம் ஆண்​டில் நடை​பெற்ற 66,841 சாலை விபத்​துகளில் 18,074 பேர் உயி​ரிழந்​துள்​ளனர். இவர்​களில் மூவரில் இரண்டு பேர் தலைக்​கா​யத்​தால் தனித்தோ மற்ற காயங்​களு​டன் சேர்ந்தோ இறந்​திருக்​கின்​றனர். சாலை விபத்​துகளில் பெரும்​பாலும் தலை​யில்​தான் அடிபடு​கிறது. தவிர, விளை​யாடும்​போதோ தவறி விழும்​போதோ ஏதேனும் பொருளால் தாக்​கப்​படும்​போதோ பெரும்​பாலும் தலைக்​கா​யம்​தான் ஏற்​படு​கிறது. இப்​படியொரு பின்​னணி​யில் தலைக்​கா​யம் தொடர்​பாகப் பலவற்றை அறிந்​து​கொள்ள இந்த நூல் உதவு​கிறது.

தலை உடற்​கூறியல் குறித்த அறி​முகத்​தோடு தொடங்​கும் கட்​டுரைகள், தலை - எலும்​புப் பெட்​டகம், மூளை, நரம்பு அமைப்​பு, தலைக்​காய சிகிச்சை முறை​கள் என விரிந்து மூளைச்​சா​வில் முடிவடைகின்​றன. நம் கவனமின்​மை​யும் தலைக்​கவசம் அணி​யாத பொறுப்​பின்மை​யுமே சாலை​விபத்​தால் ஏற்​படும் தலைக்​கா​யத்​துக்​குக் காரண​மாக இருப்​ப​தால் தலைக்​கா​யத்​தைத் தவிர்ப்​ப​தற்​கான விழிப்​புணர்​வை​யும் நூலாசிரியர் ஏற்​படுத்​தத் தவற​வில்​லை.

தலைக்​கா​யம் புரிந்து கொள்​ள... அறிந்து கொள்​ள.. தெரிந்து கொள்ள.
மரு.ஆ.திரு​வள்​ளுவன்
தமிழ்​நாடு மூளைநரம்​பியல்
மற்​றும் தண்​டுவட அறு​வைசிகிச்சை மருத்​து​வர்​கள் சங்​கம்
விலை: ரூ. 600
தொடர்​புக்​கு: 9894356498

SCROLL FOR NEXT