இலக்கியம்

அறிமுகமும் ஆவணமும் | நூல் வெளி

ஜெ.சுடர்விழி

தமிழில் தலித் இலக்​கிய உரு​வாக்​கத்​தின் பின்​புலத்​தை​யும் முன் நகர்​வை​யும் குறித்த செறி​வான உரை​யாடலாக அமைந்​துள்​ளது இந்த நூல். மராட்​டிய, கன்​னட, குஜ​ராத்​திய தலித் இலக்​கி​யங்​களின் தொடக்க முயற்​சிகள், தலித் சிந்​தனை​களி​லும் அரசி​யல் புரிதல்​களி​லும் நிகழ்ந்த விவாதங்​கள், தலித் இயக்​கங்​கள், கவிதைகள், புனை​வு​கள், அல்​புனை​வு​கள், அரங்​கச்​செயல்​பாடு​களில் தலித், தலித் அல்​லாதோரின் பங்​களிப்​பு​கள் ஆகியன பற்றி வரலாற்​றுணர்​வோடு எழுதப்​பட்ட பதினேழு கட்​டுரைகளின் தொகுப்​பாக இந்​நூல் அமைந்​துள்​ளது.

ஒடுக்​கப்​பட்ட மக்​களை ஒருங்​கிணைக்க ஜோதி ராவ்​புலே உரு​வாக்​கிய ‘தலித்’ என்ற சொல் குறித்து அம்​பேத்​கருடைய நிலைப்​பாட்​டை​யும் பின்​னாளில் இச்​சொல் ஒரு குறிப்​பிட்ட சாதி சார்ந்த சொல்​லாகச் சுருங்​கிப் போனதுடன் சாதிக்​கும், அதி​காரத்​திற்​கும் எதி​ராக எழுந்த தலித் இலக்​கி​யம் குறிப்​பிட்ட சாதி​யினர் எழுதும் இலக்​கிய​மாகப் புரிந்து கொள்​ளப்​படு​வதற்​குப் பின்​னுள்ள அரசி​யலை​யும், தலித் சொல் குறித்த ஆய்​வாளர்​களின் அறிஞர்​களின் விமர்​சனங்​களை​யும், விவாதங்​களை​யும் இந்​நூலில் ஆசிரியர் தொகுத்​துத் தந்​திருக்​கிறார்.

இந்​திய அளவில் தலித் இலக்​கி​யம் உரு​வானதன் பின்​னணி​யில் பங்​களிப்பு செய்த இயக்​கங்​களான நாமசூத்ரா இயக்​கம், சத்​யசோ​தாக் சமாஜம், மகர்​கள் சபை, சித்​தார்த்தா இலக்​கிய சங்​கம், புலை​யர் இயக்​கம் ஆகிய அமைப்​பு​களின் செயல்​பாடு​களை​யும், தமிழ் மண்​ணில் திரா​விட மகாஜன சபை, பறையர் மகாஜன சபை ஆகியவை மூலம் தாழ்த்​தப்​பட்​ட​வர்​களுக்​கான குரலாக அயோத்​தி​தாசப் பண்​டிதர், இரட்டை மலை சீனி​வாசன் ஆகியோர் தொடங்​கிய இதழ்​களின் பங்​களிப்​பை​யும் விவரித்​திருக்​கிறார். மேலும் பௌத்​த​மும் தலித்​தி​ய​மும் ஒன்​றோடொன்று இணைந்​தவை; எனவே தலித் இலக்​கி​யத்​தைப் புரிந்​து​கொள்ள பூர்வ பௌத்​தத்​தின் வரலாற்​றை​யும் புரிந்துகொள்ள வேண்​டும் என்​கிற புரிதலை​யும், வாசகர்​களுக்​குத் தரு​கிறார்.

தலித் இலக்​கி​யத்​திற்​கான வேர் அல்​லது நால்​வருணத்​திற்​கெ​தி​ரான கலகக்​குரல்​கள் பத்​தொன்​ப​தாம் நூற்​றாண்​டின் இறு​தி​யிலேயே தொடங்​கி​னாலும், அம்​பேத்​கர் நூற்​றாண்டு விழாவையொட்​டியே தமிழ் மண்​ணில் எழுச்சி பெற்​றது. அம்​பேத்​கர் எழுத்​துகள் மட்​டுமின்றி பிற மொழி தலித் இலக்​கி​யங்​களும் தமிழில் மொழிபெயர்க்​கப்​பட்​டன.

அர்​ஜூன் டாங்ளே மராட்​டி​யில் எழுதி தமிழில் தி.சு.ச​தாசிவம் மொழிபெயர்ப்​பில் வெளிவந்த ‘தலித் இலக்​கி​யம்: போக்​கும் வளர்ச்​சி​யும்’ என்ற நூலும், கவிஞர் இந்​திரனின் ‘அறைக்​குள் வந்த ஆப்​பிரிக்க வான​மும்’ வெவ்​வேறு நிலம் சார்ந்த ஒடுக்​கப்​பட்​ட​வர்​களின் குரல்​களை எதிரொலித்து தலித் இலக்​கிய தொடக்​கத்​திற்கு எவ்​வாறு உந்​துதலாக அமைந்தன போன்ற தகவல்​களை​யும், தலித் இலக்​கிய அரசி​யலை உரு​வாக்​கு​வ​தில் தீவிரம் காட்​டிய தொடக்க கால ஆளு​மை​களை​யும் இன்​றைய தலை​முறைக்கு அடை​யாளம் காட்​டி​யிருக்​கிறார்.

தங்​கள் வலிகளை​யும், துயரங்​களை​யும் எழுது​வதற்கு ஒடுக்​கப்​பட்​ட​வர்​கள் ‘தன்​வரலாற்​றெழு​தி​ய’லைக் கையிலெடுத்த வரலாற்றை மராட்​டிய மண்​ணின் முதல் தலித் தன்​வரலாறான ‘பலூட்​டா’​வில் தொடங்கி, கன்னட தன்​வரலாற்று நூல்​களை​யும் விளக்​கிப் பின் தமிழில் நடை​பெற்ற முயற்​சிகளை விளக்​கு​கிறார்.

விரி​வான நூலாக இல்​லை​யென்​றாலும் இரட்டை மலை சீனி​வாசனின் ‘ஜீ​விய சரித்​திர சுருக்​க’த்​திற்​குத் தன் வரலாற்று நூல் வரிசை​யில் முக்​கிய இடமுண்டு என்று கூறும் ஆசிரியர், புனைவு தன்​மை​யிலமைந்த பாமா​வின் ‘கருக்​கு’, ‘சங்​க​தி’ தொடங்கி, திருக்​குமரன் கணேசன் எழு​திய ‘கறி​விருந்​தும் கவுளி வெற்​றிலை​யும்’ வரை பரந்த வாசிப்பை நிகழ்த்தி அவை வெளிப்​படுத்​தும் ஒடுக்​கப்​பட்​ட​வர்​கள் வாழ்​வை​யும் வலியை​யும் பதிவுசெய்​திருக்​கிறார்.

எவ்​வளவு தான் அரசி​யல், இலக்​கிய எழுச்சி ஏற்​பட்​டாலும் எது​வுமே இன்றுவரை மாற​வில்லை என்​ப​தனை​யும், தீண்​டா​மை​யின் வடிவங்​கள் புற வடிவத்​திலிருந்து அக வடிவத்தை நோக்கி நகர்ந்​திருக்​கிறது என்​ப​தை​யும்​தான் இந்​தத் தன்​வரலாற்று நூல்​கள் வெளிப்​படுத்​துகின்​றன. தலித் ஆண்​களாலேயே ஒடுக்​கப்​படும் பெண்​களின் பிரச்​சினை​களைப் பேசும் ‘தலித் பெண்​ணி​யம்’ ஆகிய​வற்​றையெல்​லாம் தங்​களுக்​கான இலக்​கி​யங்​கள் வழி​யாக தலித்​துகள் எவ்​வாறு கட்​டமைத்​துக் கொண்​டனர் என்​ப​தை​யும் ஆசிரியர் நுட்​ப​மாக விவரித்​துச் செல்​கிறார்.

தலித் இலக்​கி​யம் கவிதை, புனைகதை, நாடகம், கட்​டுரை ஆகிய வடிவங்​களில் தங்​கள் துயரங்​கள், கொண்​டாட்​டங்​கள், வாழ்க்கை முறை​கள், வழக்​காறுகள் ஆகிய​வற்​றைப் பதிவு செய்​வதுடன், ஒடுக்​கப்​பட்ட சாதி​கள் ஒன்​றுமில்​லாதவர்​களாக​வும் அனு​தாபத்​திற்​குரிய​வர்​களாக​வும் காட்​டப்​பட்​டு, பரப்​பப்​பட்டு வரும் அவதூறுகளை மாற்ற முற்​படும் எதிர்ப்​புக் குரல்​கள் இவ்​விலக்​கி​யங்​களில் தொடர்ந்து ஒலிப்​ப​தை​யும் சுட்​டிக்காட்​டு​கிறார்.

ஒடுக்​கப்​பட்ட கறுப்​பின மக்​கள் வெகுசில​ரால் அமெரிக்​கா​வில் முன்​னெடுக்​கப்​பட்ட கறுப்​பின இலக்​கிய வரலாற்று மீட்​டெடுப்பு முயற்​சிகள் அங்கு தொடர்ந்து நடத்​தி​யதன் மூலம் அது பரவலாகக் கவனிக்​கப்​பட்டு பின்​னாளில் அமெரிக்க அரசே அதனை விழா​வாக ஏற்று நடத்​தும் சூழல் வந்​தது.

தமிழிலும் தொடர்ந்து நடை​பெற்றுவரும் தலித் இலக்​கிய, வரலாற்​று, பண்​பாட்டு மீட்​டெடுப்பு முயற்​சிகள் கவனம் பெற்​றதன் விளைவே அண்​மை​யில் தமிழக அரசு பொறுப்​பேற்று நடத்​திய ஆதிக் கலைக்​கோல் விழா. இந்த இடம் வரை வரு​வதற்கு கருத்​தி​யலிலும் களத்​தி​லும், நின்று ஒரு நெடும் போ​ராட்​டத்​தைத் தலித் சிந்​தனை​யாளர்​களும் படைப்​பாளர்​களும் நிகழ்த்​தி​யுள்​ளனர்​. இப்​பெரும்​பயணத்​தின்​ ஆவண​மாக​வும்​ இந்​நூல்​ ​முக்​கியத்​துவம்​ பெறுகிறது.

தமிழில்
தலித்தியம்
சுப்பிரமணி இரமேஷ்
கிழக்கு பதிப்பகம்
விலை: ரூ. 260
தொடர்புக்கு: 044 42009603

- தொடர்புக்கு: sudaroviya@gmail.com

SCROLL FOR NEXT