இலக்கியம்

காற்றில் மிதக்கும் கதை

செய்திப்பிரிவு

புத்தரின் சொற்களைத் தன் நினை​விலிருந்து மீட்​டெடுத்​து, தம்ம பிடகத்தை கட்​டமைத்த ஆனந்​தரின் கதையி​லிருந்து இந்த நாவல் தொடங்​கு​கிறது. ஆனந்​தி, யசோ​தா, கௌதமி எனப் புத்​தர் வாழ்க்​கை​யில் தொடர்​புடைய பெயர்​களே சமகாலத்​தில் நிகழும் இந்​தக் கதை​யிலும் புழங்​கு​கின்​றன.

மரபான கதை சொல்​லலாக இல்​லாமல் ஆனந்​தி​யின் வாழ்​வின் ஒரு குறுக்​கு​வெட்​டுத் தோற்​றம் நூலில் கடைபரப்​பப் படு​கிறது. மாற்​றுப் பாலினத்​தவரின் வாழ்​வில் ஏற்​படும் மகிழ்​வான தருணங்​கள், நொய்​மை​யான தருணங்​கள் என கலவை​யாகக் காட்​சிகள் விரி​கின்​றன.

புத்​தரின் வாழ்க்​கை​யில் முக்​கியப் பங்கு வகித்த அவரது சிற்​றன்னை கௌதமி​யின் பெயரைக் கொண்​ட​வர்​தான் ஆனந்​தி​யின் தாய். இளம்​பரு​வத்​தில் கல்​வி​யும், தோழமை​யும் மறுக்​கப்​பட்​ட​தால் காயப்​பட்ட கௌதமி, தனக்​குப் பெண் குழந்​தையே வேண்​டாம் என்று நினைக்​கிறார். அவர் விருப்​பிற்கு ஏற்ப பிறந்த மகனே பின்​னால் தன்னை ஒரு பெண்​ணாக முன்​வைக்​கும்​போது, அவ்​வுறவு விருப்​பும் வெறுப்​பும் கலந்த கலவை​யாகிறது.

பொது​வாகவே அம்மா மகன் உறவைப் போன்​றதல்ல; அம்மா மகள் உறவு. அது பெரும்​பாலும் சேர்ந்​திருக்​கை​யில் வெறுப்​பும், இழந்​த​பின் அன்​பு​மாக விரிவடை​யும் வினோத​மான ரசாயனம். அதி​லும் மாற்​றுப் பாலின அடை​யாளத்தை முன் வைக்​கும் மகளோடு கௌதமி கொண்​டிருக்​கக்​கூடிய உறவு நுட்​ப​மான சிடுக்​கு​கள் நிறைந்​தது.

தாயுடன் மட்​டுமல்​லாது, துணை​யாக வரும் யசோ​தா, தோழர்​களான யாஸ்​மின், கவின்​,சிவா என அனை​வருட​னுமே ஆனந்தி கொள்​ளும் உறவின் சிடுக்​கு​களே கதை​யின் பேசுபொருள். எல்​லாச் சிடுக்​கு​களும் சேர்ந்து ஆனந்​திக்கு மனச்​சோர்வை அளிக்​கின்​றன. அது உற்​சாகக் குறைவு, எதி​லும் நாட்​ட​மின்​மை, குற்​றவுணர்​வைத் தூண்​டு​தல் எனப் பல்​முனைத் தாக்​குதலை நம் மீது நடத்​தக் கூடியது. அதே கோணங்​களி​லேயே கதை விரி​கிறது.

நாவலில் எல்​லாச் சம்​பவங்​களும் விரி​வாக உரை​யாடலுடன் முன் வைக்​கப்​படு​வதற்கு மாறாக, தீற்​றல்​களாக அங்​கங்​குச் சிந்​திச் செல்​லும் முறை, வயலட்​டுக்கு லாகவ​மாகக் கைவந்​திருக்​கிறது. கதையல்​லாத கதை சொல்​லல், நிகழ்​காலத்​திற்​குப் பின்​னணி​யாக வரும் கடந்த கால விவரிப்​பு​கள் எனக் கரடு​முர​டான பாதை​யில் மிக அநாயச​மாகக் காற்​றில் மிதப்​பது​போலச் செல்​கிறது மொழிநடை.

வில்​லி​யம் ரைஸ் டேவிஸ், ஹெர்​மன் ஓல்​டன்​பெர்க் , எரி​யும் நூல​கத்​தைக் கனவில் கண்​டலறும் புத்த பிக்​கு, கே.எஸ். எனத் தொடரும் வரிசை​யில் ஆனந்​தி​யும் தம்ம பதத்​தின் பிர​திக்​குள் தொலைந்து போகிறாள். தம்ம பதத்​தின் தத்​து​வச் சுழல்​களுக்​குள் அமிழும் ஆனந்​தி​யின் முன் கலங்​கரை விளக்​காகச் சுடர்​வது சிறிய குருசடி​யில் ஒளிரும் மேரி​யின் முகம்​தான். அந்த முகமே கௌதமியைப் புரிந்து கொள்ள ஆனந்​திக்கு உதவு​கிறது. வழக்​க​மான கதை, அதற்​கொரு முடிவு என்​றில்​லாது ஆனந்​தி​யின் நாட்​குறிப்பை எட்​டிப் பார்ப்​பது போன்​ற வாசிப்​பனுபவத்​தைதந்​த நாவல்​ இது. - லக்ஷ்மி பாலகிருஷ்ணன்

இதோ நம் தாய்
வயலட்
சால்ட் பதிப்பகம்
விலை:ரூ.125
தொடர்புக்கு: 99941 54104

அரசியலும் மெல்லுணர்வும்: மலையாள நவீனக் கவித்துவத்துக்கு வித்திட்டவர் களில் சச்சிதானந்தன் முதன்மையானவர். சச்சிதானந்தன் மலையாளத்தைத் தாண்டி தமிழ்க் கவிதைகளிலும் பாதிப்பை விளைவித்தவர். சுகுமாரன், சச்சிதானந்தன் கவிதைகளால் பாதிக்கப்பட்டவர். சச்சிதானந்தன் கவிதைகளில் கையாளும் மலையாளச் சொற்களுக்கு உரிய மெல்லிசைத்தன்மையும் தமிழில் இன்று ஒரு போக்காக விரிவடைந்துள்ளது.

மனுஷ்யபுத்திரனிடம் இந்தத் தன்மையைப் பார்க்கலாம். தமிழ்க் கவிதைக்கு நன்மை சேர்க்கும் நோக்கத்துடன் சச்சிதானந்தனின் இந்தச் ‘சொற்களின் சிற்பமும்’ வடிக்கப்பட்டுள்ளது. மொழிபெயர்ப்பாளர் சிற்பி இதைத் தமிழுக்கு நெருக்கமாக மாற்றியிருக்கிறார்.

சமூகப் பிரச்சினைகளை எழுதுவது இன்றைக்குத் தமிழிலும் ஒரு பெரும்போக்குதான். ஆனால், அதை எப்படிக் கையாள வேண்டும் என்பதை மகாகவிகள் மட்டுமே அறிவார்கள் எனலாம். சச்சிதானந்தனின் இந்தக் கவிதைகளில் அந்தத் தன்மையைப் பார்க்கலாம். புதிய சட்டத் திருத்தங்களால் மலைகள் சிதைக்கப்படுவதை, தலைநகரில் நடைபெற்ற உழவர்களின் போராட்டம் என எல்லாவற்றையும் கவிதைக்குள் கொண்டுவந்திருக்கிறார்.

அவை கவிதையாகவே வெளிப்பட்டுள்ளது. ‘வீடிருந்த இடத்தில் வீடில்லை/ இருப்பது கான்கிரீட்டில் கட்டப்பட்ட ஒரு கூக்குரல் மட்டுமே’ என்கிற ஒரு கவிதையை இந்தத் தன்மைக்கான ஒரு பதமாக முன்வைக்கலாம். அரசியல் அல்லாத உணர்வுகளைச் சொல்லும் கவிதைகளும் ஒரு மெல்லிசை போல் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. - மண்குதிரை

உழவனின் பாடல்
சச்சிதானந்தன் (தமிழில்:சிற்பி)
அருட்செல்வர் நா.மகாலிங்கம்
மொழிபெயர்ப்பு மையம்
விலை: ரூ.130
தொடர்புக்கு: 04259 236030

பால்வண்ணம் விருதுக்குப் பரிந்துரை | திண்ணை: தோழர் பால்வண்ணம் நினைவாக சிறந்த சிறுகதைத் தொகுப்புகளுக்கு விருதுகள் வழங்கப்படவுள்ளன. சிறந்த சிறுகதைத் தொகுப்புகள் மூன்றுக்கு தலா ரூ.10,000 ரொக்கமும், நினைவுப் பரிசும் வழங்கப்படவுள்ளன. 2024ஆம் ஆண்டு வெளியான சிறுகதைத் தொகுப்புகளாக இருக்க வேண்டும். அனுப்ப வேண்டிய கடைசித் தேதி: 20.04.2025. தொடர்புக்கு: 9486715755.

பெண் எழுத்துகளுக்குப் பரிசு: பெண் எழுத்துகளை ஊக்குவிக்கும் வகையில் ஹெர் ஸ்டோரீஸ் பதிப்பகம் சிறந்த பெண்ணியச் சிறுகதைத் தொகுப்பு, நாவல், வரலாற்று நூல், அறிவியல் நூல், பெண்ணிய நூல், சிறார் நூல் ஆகிய நூல்களுக்கு விருது வழங்கவுள்ளது. நூல்களுக்குத் தலா ரூ.10,000 பரிசு வழங்கப்படவுள்ளது. மேலதிகத் தொடர்புக்கு: 75500 98666

SCROLL FOR NEXT