இலக்கியம்

இயல்பான மனிதர்களின் கதைகள் | நூல் நயம்

செய்திப்பிரிவு

ஒரு பொது​வினா: ‘உல​கத்​தில் யாருக்​கும் நடக்​காததா உனக்கு நடக்​கிறது, நீ மட்டும் என்ன உசத்​தி?’. ‘ஆமாம், எனக்கு நான் உசத்தி​தான்’ என்று அடித்​துச் சொல்​பவர்கள் ‘அந்தி வானின் ஆயிரம் வெள்ளி’ தொகுப்​பின் கதை மாந்​தர்கள். ஒரு சறுக்​கலுக்​குப் பிறகு, புழு​தி​யில் வீழ்ந்த பிறகு, நிதானமாக எழுந்து, கை, கால் மூட்டு​களைத் தட்டி விட்டுக்​கொண்டு, சுற்றி நின்று பார்க்​கும், சிரிக்​கும் முகங்​களைப் பொருட்​படுத்தாமல், சறுக்கிய வழியிலேயே மீண்​டும் ஏறும் அபாய விரும்​பிகள் இவர்​கள்.

சில சமயங்​களில், முணு முணுத்​துக்​கொண்டோ, கண்ணீரைத் துடைத்​துக்​கொண்டோ, சேர்ந்து சிரித்​துக்​கொண்டோ, காப்​பியோ டீயோ ஒரு குவளையை கையில் ஏந்தித் திரும்பி ஏறும் வழியில் ஒரு துணைக்​கரம் நீள்​வதுண்டு. அப்படி நீளும் கரங்கள் இந்தக் கதைகளை உச்சிக்கு அழைத்​துச் செல்​கின்றன. பழ ஜூஸ் வாங்​கித் தர விரும்​பும் சவரி​யும், பக்கத்து வீட்டுக்​குள் வந்து காப்பி கலக்​கும் சீதா​வும் நட்சத்​திரங்​களே​.

தமயந்​தி​யின் சொற்சிக்​கனம் அபார​மானது. ‘‘எவன் தொட்​டாலும் எனக்காக ஒருத்தன் கதவோரமா குத்த வச்சிருப்​பான்னு அவளால சொல்ல முடியல...’’ ஒரு முழு வாழ்க்கையை, அதன் குழப்​பங்​களை, சறுக்​கல்​களை, தழும்​புகளை இந்த வரியைக் கொண்டு விளக்​கிவிட அவரால் முடிகிறது. குழந்தைக்​குப் பிடித்​தமான உணவைக் கொடுத்து​விட்டு, “அது பசியோடு சொர்க்​கத்​தில் உட்கார்ந்து சாப்​பிடு​கிறது” என்று கண் முன்​னால் குழந்தையை உட்கார வைத்து, அடுத்த வரிக்​குக் கடந்து போகவிடாமல் நின்று ரசிக்க வைக்க அவரால் முடிகிறது.

இந்தச் சிறுகதைகளில்​இருப்பவை எந்தக் கேள்விக்கான பதில்​களும் அல்ல; சின்னஞ்​சிறு வெளிச்​சங்​கள். கசப்பும் ஏமாற்​ற​மும் முதுகில் தொற்றிக்​கொண்டே இருந்​தா​லும், பிடிவாத​மாகத் தன் வாழ்க்கை​யைத்தான் வாழ்ந்து பார்க்க எத்தனிக்​கும் மனிதர்​களின் கதைகள் இவை. ‘மீச...’ கதையின் செபாஸ்​டியனும், பிடி​மானம் இற்றுப்​போய்ச் சரியும் ஒருத்​தியை உடனடி​யாகத் தன் வாகனத்​தில் ஏற்றிக் கொள்​ளும் ‘இப்​படிக்கு வாழ்க்கை’ கதையின் சவரி​யும், இவள் செய்​வதெல்​லாம் பிடிக்க​வில்லை என்று சொல்​லிக்​கொண்டே தாங்​கிப் பிடித்​துக்​கொள்​ளும் ‘ஒளி​யின் வெளிச்​சக்​கிளை​கள்’ கதையின் சீதாலமி​யும், தன்னைப் பிறழ்த்​தியது இவளைச் சீண்​டி​விடக்​கூடாது என்ற தெளிவு நிரம்பிய ‘மரணமென்பது ஒரு சொட்டு அமிலத்​துளி’ கதையின் அமலி​யும், சற்றும் உயிர் குன்​றாமல் இந்தக் கதைகளில் வளைய வருகிறார்​கள்.

ஒரு மர நிழல் கிடைத்து​விடாதா என்ற எதிர்​பார்ப்பும், இல்லா​விட்​டாலும்​தான் என்ன, நாளை மீண்​டும் ஓடுவோம் என்ற எளிய துணிவுமே ‘அந்தி வானின் ஆயிரம் வெள்ளி’ தொகுப்​பில் மாறி மாறித் தென்​படும் காட்​சிகளாக இருக்​கின்றன. தன்னியல்பாக மனிதர்களை நம்ப விரும்​பும் மனிதர்​கள், தோற்​றாலும், வீழ்ந்​தா​லும் வசீகரிக்​கிறார்​கள்.
இரண்டு வரி​கள் மட்டுமே ​கா​தில் ​விழுந்த பாடலின் மூன்​றாம் வரியாக இந்​தக் கதைகளும், மனிதர்​களும் வாசித்து ​முடித்த பின்னும் உடன் வருவதை உணர ​முடிகிறது - தென்றல் சிவகுமார்

அந்தி வானின் ஆயிரம் வெள்ளி
தமயந்தி
எழுத்து பிரசுரம்
விலை: ரூ.120
தொடர்புக்கு: 8925061999

எலிகளின் உலகம்: சாகசம் என்றால் பிடிக்காத குழந்தைகள் யாரும் இருக்க வாய்ப்பில்லை. சாகசம் என்றால் தமிழில் துணிகரம் என்று சொல்லலாம். துணிவு மட்டுமல்ல நல்ல கூர்மையான அறிவும் சாகசம் செய்யத் தேவையான அடிப்படைக் குணங்களில் ஒன்று. இவை இரண்டும் மட்டும் சாகசத்திற்குப் போதுமா என்ன? இல்லை, இவையிரண்டையும் விட அவசியத் தேவை அச்சம்தான்.

சாகசம் செய்ய பயம் தேவையென்றால் அது உளறலாகத் தோன்றுகிறதா? இந்த முக்​கியமான விஷயத்​தைக் குழந்தை​களுக்கு, அவர்​களின் விருப்​பத்​திற்கு உரிய வகையில் சொல்​லும் கதையே ‘எலியின் வேட்டை’ எனும் சிறார் நாவல். இது விஷ்ணுபுரம் சரவணனின் புதிய நூல். பொதுவாக இங்கே புழங்​கும் கதைகள் எல்லாமே மனிதர்​களுக்​கானவை மட்டுமே. ஆகவே கதையின் போக்கு, கதையின் முடிவு, அக்கதை உணர்த்​தும் கருத்து என அனைத்​துமே மனித வர்க்​கத்​தினரையே முன்னிறுத்து​வதாக இருக்கும்.

உதாரணமாக காகம் வந்து பாட்​டி​யின் கடையில் உரிய காசைக் கொடுத்து, அவர் பொட்​டலம் கட்டித் தரும் வடையை வாங்​கிப் போக வேண்​டும். மாறாக அது தங்கள் குலவழக்​கப்படி கண்ணில் பட்ட உணவைக் கொத்​திக் கொண்டு போய்க் கிளை​யில் அமர்ந்து உண்ண நினைத்​தால் அதற்​குத் திருட்டுப் பட்டம் கட்டி​விடு​வோம் நாம்.

காகத்​தின் அகரா​தி​யில் திருட்டு என்றொரு வார்த்தை இருக்க முடி​யுமா என்ப​தைப் பற்றியெல்​லாம் நமக்கு என்ன கவலை? மனிதர்​களாகிய நமது அகரா​தி​யில் உள்ள பொருளின்​படியே விலங்​கு​களை​யும் வகைப்​படுத்தி, திருட்டுக் காக்கை, தந்திர நரி, வீரமான சிங்கம் என்றெல்​லாம் முத்​திரை குத்தி, நம் கதையுல​கெங்​கும் உலவ விட்​டிருக்​கிறோம்.

மாறாக மனிதர்​களையே பொருட்​படுத்​தாத, முழுக்க முழுக்க எலிகளின் பார்​வைக் கோணத்​திலேயே உருவாகி வந்திருக்​கும் உற்சாகமான நாவல் இது. இந்நூலை சுயமாக வாசிக்​கத்​தெரிந்த குழந்தைகள் அவர்களே வாசித்து மகிழலாம் அல்லது பெற்​றோர் வாசித்துச் சொல்​வதாக இருந்​தால் குரலை ஏற்றி இறக்கி, வானொலி​யில் ஒலிச்​சித்திரம் கேட்​போமே அப்படி வாசித்​துக் காட்​டி​னால் ரசித்​துக் கேட்​பார்​கள்.

குழந்தைகளுக்கு உற்சாகம் கொடுப்​ப​தோடு மட்டுமல்​லாது, அவர்கள் கற்றுக் கொள்ள​வும் இதில் விஷயங்கள் உண்டு. சாகசங்களை விரும்​பும் பிள்​ளை​கள், அவர்​களின் பாது​காப்​பைப் பற்றியே சதா சர்வ​கால​மும் கவலைப்​படும் பெற்​றோர் என இருதரப்​புக்​கும் சரியான இடம் கொடுத்து, மிகுந்த சமநிலை​யோடு எழுதப்​பட்​டிருக்​கு இந்த நாவல் குழந்தை​களுக்குக் கோடை விடு​முறைக்​கு ஏற்​ற பரிசாக இருக்கும்​ - லக்ஷ்மி பாலகிருஷ்ணன்

எலியின் வேட்டை (சிறார் நாவல்)
விஷ்ணுபுரம் சரவணன்
புக்ஸ் ஃபார் சில்ட்ரன்
விலை: ரூ.180,
தொடர்புக்கு: 044 2433 2924

SCROLL FOR NEXT