கவிஞர் ஆல்கா பி ஆரோனின் ‘காலிடுக் கில் ஒப்பந்தங்கள்’ கவனம்பெற்ற கவிதைத் தொகுப்பு. திருநங்கையான இவர் மெல்லிய தனது உணர்வுகளைக் கவிதைகளாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
காதலின் இயல்பான உன்மத்தத்தையும் இந்தக் கவிதைகளில் உணர முடிகிறது. இந்தக் கவிதைத் தொகுப்பு ‘With Thy Femme’ என்கிற தலைப்பில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ‘திருநங்கை பிரஸ்’ இந்தப் புத்தகத்தை வெளியிட்டுள்ளது. Kritz Nebula என்கிற புனைப்பெயரில் இந்நூலைப் பத்திரிகையாளர் கிருத்திகா னிவாசன் மொழிபெயர்த்திருக்கிறார்.
வெல்லும் பெண்கள்: இலக்கியத்தில் பெண்கள் சர்வதேச அளவில் கவனம்பெறுவது முக்கியமானது. குறிப்பாக நோபல், புக்கர் போன்ற விருதுகளைப் பெண்கள் பெறுவது கலை - இலக்கியச் செயல்பாடுகளில் அவர்களது தீவிரத்தை உணர்த்துவதாக அமையும்.
ஆண்களோடு ஒப்பிடுகையில் உலகம் முழுவதுமே இலக்கியத்தில் பெண்களின் பங்களிப்பு குறைவாக உள்ள சூழலில் இதுபோன்ற அங்கீகாரங்கள் பெண்களின் இலக்கிய வருகையை அதிகரிக்கும். 2018, 2020, 2022, 2024 என இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பெண் எழுத்தாளர்கள் நோபல் பரிசை வென்றிருப்பதும் 2020, 2022, 2024 ஆகிய ஆண்டுகளில் சர்வதேச புக்கர் பரிசைப் பெண் எழுத்தாளர்கள் வென்றிருப்பதும் இதுபோன்றதொரு முன்னகர்வுதான்.