இலக்கியம்

நல்ல நேரம் அறிந்து செயல்படுவோம்! | நம் வெளியீடு

செய்திப்பிரிவு

கலைகளுள் மிகவும் மேன்மை பொருந்​தி​யதாக போற்​றப்​படும் பஞ்ச பட்சி சாஸ்​திரம், சிவபெரு​மானால் பார்வதி தேவி​யிடம் கூறப்​பட்​டதாக ஐதீகம். இந்தக் கலையை அறிந்​திருந்​தால், அனைத்​தி​லும் வெற்றி காணலாம் என்று அறியப்​படு​கிறது. பஞ்ச பட்சி சாஸ்​திரத்​தைக் கொண்டு வல்லூறு, ஆந்தை, காகம், கோழி, மயில் ஆகிய 5 பறவை​களின் குணநலன்களை மனிதரோடு ஒப்பிட்டு பார்க்​கும் வழக்கம் உள்ளது.

ஒருவர் பிறக்​கும் நட்சத்​திரத்​தின் அடிப்​படை​யில் அவருக்கான பறவை தீர்​மானிக்​கப்​படு​கிறது. பட்சி சாஸ்​திரம், குருநாதரின் வழியாகச் சீடர்​களுக்கு கூறப்​பட்டு வந்தது. பார்வதி தேவி முருகப் பெரு​மானுக்​கும் முருகப் பெரு​மான், அகத்தியர் போன்ற சித்தர்​களுக்​கும் இக்கலையை எடுத்​துரைத்​தனர்.

பார்வதி தேவி நந்திதேவருக்​கும் இக்கலையை பயிற்று​வித்​தார். நந்திதேவர் மூலம் போகருக்​கும், போகர் மூலம் உரோமரிஷிக்​கும் இக்கலை பயிற்று​விக்​கப்​பட்​டதாக ஐதீகம். பஞ்ச பூதங்களை கட்டுப்​படுத்​தும் ஆற்றல் பஞ்சாட்​சரம் என்ற சிவ மந்திரத்​துக்கு உண்டு. அதனால் பஞ்சாட்​சரம் ஜெபிப்​பவரை, யாராலும் வெற்றி​கொள்ள முடி​யாது என்பதை பஞ்ச பட்சி சாஸ்​திரம் வெளிப்​படுத்து​கிறது. (ந – வல்லூறு, ம – ஆந்தை, சி – காகம், வ – கோழி, ய – மயில்) பஞ்சாட்சர மந்திரத்​துக்கு உரிய தேவதையாக இருக்​கும் சிவபெரு​மானே முதலில் இந்த சாஸ்​திரத்தை உபதேசித்துள்ளார்.

பஞ்ச பட்சி சாஸ்​திரத்​தின் மூலம் எதிர்​காலத்​தில் நடைபெற உள்ள செயல்களை முன்​கூட்​டியே அறிந்து கொள்ள முடி​யும். ஒரு செயலை செய்​யும்​போது, அதை நல்ல வேளை​யில் தொடங்​கினால் அதன் பலன் நன்மை​யாகவே அமையும், நமது முன்னேற்​றத்​துக்கான வழிகாட்​டியாக நாம் பஞ்ச பட்சி சாஸ்​திரத்தை பயன்​படுத்​திக் கொள்​ளலாம். தம்பிரான் ரிஷபானந்த சுவாமிகள் கணித்த பஞ்ச பட்சி பலன்கள் இந்த நூலில் உள்ளன. 2025ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி ​முதல் ​மார்ச் 31ஆம் தேதி வரையிலான பஞ்​ச பட்​சி பலன்​கள்​ இந்​த நூலில்​ இடம்​ பெற்​றுள்​ளன.

பஞ்சபட்சி பஞ்சாங்கம் 2025
தம்பிரான் ரிஷபானந்தர்
இந்து தமிழ் திசை பதிப்பகம்
விலை: ரூ.90
ஆன்லைனில் பெற: https://store.hindutamil.in/publications
தொடர்புக்கு: 7401296562

சம்சாரிகளின் சாகா வாழ்வு: கரிசல் பூமியில் வாழும் எளிய மக்களின் வாழ்க்கைப்பாடுகளைக் கதைகளாக எழுதிவரும் எழுத்தாளரின் நான்காவது சிறுகதை நூலிது. இதிலுள்ள 20 கதைகளிலும் வரும் மனிதர்கள் அனைவருமே கரிசல் மண்ணின் வெள்ளந்தியான சம்சாரிகளாக இருக்கிறார்கள். அவர்களது அன்றாடங்களை, அவர்களது பேச்சு மொழியிலேயே எழுதியுள்ளார்.

தனக்கென இருக்கும் நாலுகுறுக்கம் நிலத்திலும் மக்காச்சோளத்தைப் பயிரிட்டுவிட்டு, அதில் அமெரிக்கன் புழு நெளிவதைக்கண்டு புலம்பும் சம்சாரி ரவியும் (‘முறிமுக்கால்’), சொந்த மாமா மகனான வெள்ளைச்சாமியை வேண்டாமெனச் சொல்லி, அசலூரானுக்கு வாக்கப்பட்டுச் செல்லும் லட்சுமி, மணமான பின்னர் வெள்ளைச்சாமியின் கனிவான விசாரிப்பில் நெகிழ்ந்து போவதும் (‘பிசகு’), குடித்துவிட்டுப் பச்சிளம் குழந்தையைப் பாலியல் துன்புறுத்தல் செய்யத் துணிந்த கணவனை அடித்துக் கொன்றுவிட்டு ஜெயிலுக்குச் சென்று திரும்பும் சோலையம்மாளும் (‘கொட்டாப்புளி’) வாசித்து முடித்த பிறகும் நம் சாகா வாழ்வுடைய சம்சாரிகளாக நம் மனதில் நிலைபெறுகிறார்கள். ஏமிலாந்தி, பூரிதக்குஞ்சலம், மந்தைப்பிஞ்சை, ஒச்சன் ஆகிய கதைகள் தனித்த கவனத்தைக் கோருகின்றன. - மு.முருகேஷ்

மந்தைப்பிஞ்சை
கா.சி.தமிழ்க்குமரன்
பவித்ரா பதிப்பகம்
விலை: ரூ.180
தொடர்புக்கு: 8778924880

SCROLL FOR NEXT