நூல் நயம்: சமகாலத்தைப் புரிந்துகொள்ள உதவும் கதைகள்

By செய்திப்பிரிவு

தொகுப்பில் உள்ள பத்துக் கதைகளும், புத்தாயிரத்துக்குப் பிந்தைய வாழ்க்கையில் நிகழ்ந்துள்ள மாற்றங்களைப் பிரதிபலிக்கின்றன. கதைகள் நேர்க்கோட்டில் சொல்லப்படுவதாகவும் சரளமான மொழியில் வாசிப்புக்கு உகந்ததாகவும் எழுதப்பட்டுள்ளன. இந்தக் கதைகளின் பேசுபொருள்களும் அவை கையாளப்பட்டுள்ள விதமும் இந்தக் கதைகளைத் தீவிர வாசிப்புக்கானதாக ஆக்குகின்றன.

கட்டுக்கோப்பானவராகவும் கண்ணியமானவராகவும் மதிக்கப்படும் ஒரு நடுத்தர வயது மனிதர், தன்னை அறியாமல் நிலை தவறும் தருணத்தைச் சுற்றிப் பின்னப்பட்டுள்ளது ‘திரைகள்’. மனித மனத்தின் அடி ஆழத்தில் புதைந்து கிடக்கும் ஏக்கங்கள் அசந்தர்ப்பமான சூழலில் உடைத்துக்கொண்டு வெளியேறுவதால் சுற்றத்தாருக்கு ஏற்படும் அதிர்ச்சியும் சம்பந்தப்பட்டவருக்கு விளையும் சங்கடமும், திடீரென்று பீடத்திலிருந்து தள்ளிவிடப்பட்டதை விளங்கிக்கொள்ளவும் ஏற்றுக்கொள்ளவும் முடியாத தத்தளிப்பும் இந்தக் கதையில் அழுத்தமாகப் பதிவாகியுள்ளன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

7 mins ago

சினிமா

24 mins ago

தமிழகம்

10 mins ago

தமிழகம்

53 mins ago

தமிழகம்

27 mins ago

சினிமா

33 mins ago

வணிகம்

15 mins ago

இந்தியா

27 mins ago

இணைப்பிதழ்கள்

1 hour ago

சினிமா

28 mins ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

2 hours ago

மேலும்