நான்கு கவிதை நூல்களை எழுதியுள்ள கவிஞரின் ஐந்தாவது கவிதை நூல் இது. கண்களில் படும் காட்சிகளில் ஏதோவொன்று மனதின் அடியாழத்தில் அப்படியே தங்கிப் பல நாள்கள் உள்ளூறிக் கிடந்து, யாரும் எதிர்பார்க்காத ஒரு கணத்தில் ‘கீச்… கீச்’செனும் ஓசையுடன் கண் விழிப்பதையே கவிதைகளாக எழுதியுள்ளார் ப.சொக்கலிங்கம். 71 குறுங்கவிதைகள் அடங்கிய இந்நூலில் பல கவிதைகள் நம் பார்வையில் அன்றாடம் படும் நிகழ்வென்றாலும் அதைக் கவிதையாக வாசிக்கையில் ‘அட’ சொல்ல வைக்கிறது.
‘பாம்படத்தைக் கைப்பற்றியதும்/மாயமானான் இறுதிச் சடங்கு செய்யாது/இன்னொருமுறை/மரணித்துப் போனாள் பாட்டி’ எனும் வரிகள், நம்மைக் கவிதைக்கு நெருக்கமாகக் கொண்டுவந்து சேர்க்கின்றன. ‘ஓசையின்றி மலர்கின்றன மலர்கள்/பாம்புச்செவி/பட்டாம்பூச்சிகளுக்கு’ எனும் வரிகளும், ‘வறண்ட கோடைகளில்/மேகமாகி விடுகிறாள்/சிறுமி’ எனும் வரிகளும் மனதிற்குள் சித்திரமாக விரிகின்றன. சில கவிதைகளுக்கான தலைப்புகளைப் பார்க்கையில் சுமையில்லாமல் காலாற நடந்துபோகும் பயணத்தில் எதற்குத் தலையில் சும்மாடு என்று கேட்கத் தோன்றுகிறது. - மு.முருகேஷ்
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
இந்தியா
7 hours ago
வாழ்வியல்
8 hours ago
இந்தியா
9 hours ago
விளையாட்டு
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
சினிமா
11 hours ago
இந்தியா
11 hours ago