நூல் நயம்: தொடக்க சினிமா வரலாறு!

By செய்திப்பிரிவு

தமிழ் சினிமாவின் வரலாறு, ஆர்.நடராஜ முதலியார் என்கிற தமிழர், இந்தியன் பிலிம் கம்பெனி என்கிற பட நிறுவனத்தைத் தொடங்கி, 1916இல் தயாரித்து முடித்த ‘கீசக வதம்’ என்கிற சலனப் படத்திலிருந்து தொடங்குகிறது. தமிழ்ச் சலனப் படங்கள் பற்றிய தரவுகள் நமக்கு முழுமையாகக் கிடைக்கவில்லை என்பது துரதிர்ஷ்டம். ஆனால், தமிழ் பேசும்பட சகாப்தம் 1931இல் வெளியான ‘காளிதாஸ்’ படத்திலிருந்து தொடங்குவதும் அதன் பிறகான படங்களின் தரவுகள் காப்பாற்றப்பட்டிருப்பதும் நமது அதிர்ஷ்டம்.

இந்நூலின் ஆசிரியர் 1931-32 ஆகிய 2 ஆண்டுகளில் வெளியான தமிழ் பேசும் படங்களிலிருந்து ‘காளிதாஸ்’, ‘ஹரிச்சந்திரா’, ‘காலவமஹரிஷி’ ஆகிய மூன்று படங்களைத் தேர்வுசெய்து, அப்படங்களைக் குறித்த பின்னணித் தகவல்களை முன்னோடி ஆய்வாளர்களின் ஆய்வுத் தரவுகளிலிருந்து திரட்டித் தந்திருக்கிறார். அசலான உழைப்பின் வழி உருவாகியுள்ள இச்சிறுநூல், தமிழ் சினிமாவின் தொடக்க வரலாற்றை வாசிக்கும் ஆர்வலர்களுக்கு ஏமாற்றம் அளிக்காது. - ஜெயந்தன்

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

7 hours ago

வணிகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

இணைப்பிதழ்கள்

9 hours ago

க்ரைம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்