மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசிய பூங்காவில் 70 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சிவிங்கிப் புலிகள் இப்போது மீண்டும் வலம் வருகின்றன. நமீபியாவிலிருந்து 8 சிவிங்கிப் புலிகள், சிறப்பு சரக்கு விமானம் போயிங் 747 மூலம் இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டன. அவற்றை காட்டில் விட்டிருக்கிறார் பிரதமர் மோடி.
சிறுத்தைக்கும், சிவிங்கிப் புலிகளும் வேறுபாடு என்ன என்பதே அந்தக் குழப்பம். சில விலங்குகள் பார்ப்பதற்கு ஒரே மாதிரி இருக்கும். ஆனால், அவை ஒரே விலங்கினமாக இருக்காது. கொஞ்சம் உன்னிப்பாக கவனித்தால் சின்ன சின்ன வேறுபாடுகளை உணரமுடியும். இது சிவிங்கிப் புலிகளுக்கும் பொருந்தும். சிறுத்தை (leopard) - சிவிங்கிப் புலி (cheetah) இரண்டும் பார்க்க ஒரே மாதிரிதான் இருக்கும். இரண்டுமே பூனைக் குடும்பத்தைச் சேர்ந்த பெரிய விலங்குகள். இரண்டின் பழக்கவழக்கங்களும் கிட்டத்தட்ட ஒத்துப்போகும். ஆனால், இரண்டும் வெவ்வேறு விலங்குகள். அவை:
சிவிங்கிப் புலி
சிறுத்தை
தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் (என்டிசிஏ) தலைவர் எஸ்.பி.யாதவ் கூறும்போது, “வன விலங்குகள் மற்றும் அவற்றின் வாழ்விடங்களில் மறுமலர்ச்சி மற்றும் பன்முகத் தன்மையை உறுதிப்படுத்தும் திட்டத்தின் ஓர் அங்கமாகவே நமீபியாவிலிருந்து சிறுத்தைகள் வரவழைக்கப்பட்டுள்ளன.
உலகில் மிக வேகமாக மணிக்கு 100 முதல் 120 கி.மீ. வேகத்தில் ஓடக்கூடிய விலங்கு சிறுத்தையாகும். இவற்றின் அழகிய வாழ்விடமாக குனோ தேசிய பூங்கா திகழும். விலங்குகளை வேட்டையாடுவதை தடுப்பதற்காக இந்தப் பூங்காவில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் சிறப்பான வகையில் செய்யப்பட்டுள்ளன. ரேடியோ காலர் பொருத்தி சிறுத்தைகளின் நடமாட்டம் செயற்கைக்கோள் மூலமாக கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று அவர் கூறியிருந்தார்
முக்கிய செய்திகள்
விளையாட்டு
4 hours ago
சினிமா
5 hours ago
விளையாட்டு
6 hours ago
வணிகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
விளையாட்டு
8 hours ago
க்ரைம்
8 hours ago
சுற்றுச்சூழல்
9 hours ago
க்ரைம்
9 hours ago
இந்தியா
9 hours ago
சினிமா
10 hours ago
கருத்துப் பேழை
10 hours ago