உ.பி.யின் மைன்புரி மக்களவை மற்றும் 5 பேரவை தொகுதிகளுக்கு டிசம்பர் 5-ல் இடைத்தேர்தல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம் மைன்புரி மக்களவைத் தொகுதி மற்றும் பல்வேறு மாநிலங்களில் காலியாக உள்ள 5 பேரவைத் தொகுதிகளுக்கு வரும் டிசம்பர் 5-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

உ.பி.யின் மைன்புரி தொகுதி எம்.பி.யாக இருந்த சமாஜ்வாதி கட்சி நிறுவனர் முலாயம் சிங் யாதவ் கடந்த மாதம் காலமானார். இதனால் காலியாக உள்ள அந்தத் தொகுதிக்கு டிசம்பர் 5-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

இதேபோல் காலியாகவுள்ள உ.பி.யின் ராம்பூர், ஒடிசாவின் பதம்பூர், ராஜஸ்தானின் சர்தார்ஷஹர், பிஹாரின் குர்ஹானி, சத்தீஸ்கரின் பானுபிரதாப்பூர் ஆகிய பேரவைத் தொகுதிகளுக்கும் டிசம்பர் 5-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும். இந்தத் தொகுதிகளில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 8-ம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் வெளியாகும். இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஆசம் கான் பதவி பறிப்பு: உத்தரபிரதேசத்தின் ராம்பூர் தொகுதி எம்எல்ஏவாக சமாஜ்வாதி கட்சியின் ஆசம் கான் இருந்தார். மதவெறுப்பு பேச்சு காரணமாக சிறைத் தண்டனை பெற்றதால் அவரது எம்எல்ஏ பதவி பறிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. டிசம்பர் 8-ம் தேதி குஜராத், இமாச்சல பிரதேச சட்டப் பேரவைத் தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கையும் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

44 mins ago

விளையாட்டு

35 mins ago

தமிழகம்

59 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

இந்தியா

2 hours ago

ஆன்மிகம்

3 hours ago

மேலும்