குஜராத் மோர்பி தொங்கு பாலம் விபத்து - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

அகமதாபாத்: குஜராத்தில் தொங்கு நடைபாலத்தில் நடந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

குஜராத் மாநிலம் அகமதாபாத் அருகே மோர்பி நகரில் மச்சு ஆற்றில் மீது அமைந்திருந்த தொங்கு பாலம் நேற்று முன்தினம் அறுந்து விழுந்ததில் 140-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

அங்கு தொடர்ந்து மீட்புப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் அந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் தெரியவந்துள்ளது. நாட்டின் மிக மோசமான பாலம் இடிந்து விழுந்த விபத்துகளில் இதுவும் ஒன்றாகக் கருதப்படுகிறது.

இதில் குஜராத்தைச் சேர்ந்த பிரதாப் சிங் ஜடேஜா குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

பிரதாப் சிங்கின் உறவினர் கனக் சிங் ஜடேஜா இதுகுறித்து கூறியதாவது:

விபத்து நடந்தபோது பாலத்தின் மீது எனது ஒன்றுவிட்ட அண்ணனான பிரதாப் சிங்கின் குடும்பத்தார் இருந்துள்ளனர். இதில் பிரதாப் சிங் ஜடேஜா, பிரதியுமான் சிங் ஜடேஜா ஆகியோரின் மனைவிகள், இந்த சகோதர்களின் தாயார், 4 குழந்தைகள் என மொத்தம் 7 பேர் நீரில் மூழ்கி இறந்துவிட்டனர்.

ஓட்டல் பணிகள் முடிந்து, பிரதாப் சிங் வீட்டுக்கு வந்தபோது வீடு பூட்டப்பட்டிருந்தது. குடும்பத்தினரின் செல்போன்களை தொடர்புகொள்ள முடியவில்லை. இதையடுத்தே குடும்பத்தினர் விபத்தில் சிக்கியது அவர்களுக்குத் தெரியவந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

வணிகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

தொழில்நுட்பம்

3 hours ago

சினிமா

4 hours ago

க்ரைம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

5 hours ago

க்ரைம்

6 hours ago

மேலும்