7 மணிக்கு மாணவர்கள் பள்ளி வரும்போது காலை 9 மணிக்கு நீதிபதிகள் பணிக்கு வர முடியாதா? - உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதி கேள்வி

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: காலை 7 மணிக்கே மாணவர்கள் பள்ளி செல்லும்போது காலை 9 மணிக்கு நீதிபதிகள் பணிக்கு வர முடியாதா என்று உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதி யு.யு.லலித் கேள்வி எழுப்பியுள்ளார்.

உச்ச நீதிமன்றத்தில் தற்போது காலை 10.30 மணி முதல் மாலை 4 மணி வரை வழக்குகள் மீது விசாரணை நடைபெறுகிறது. மதியம் 1 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை உணவு இடைவேளை விடப்படுகிறது. இந்த சூழலில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் யு.யு.லலித், ரவீந்திர பட், சுதான்ஸு அடங்கிய அமர்வு நேற்று 9.30 மணிக்கு கூடி, வழக்கு விசாரணையை தொடங்கியது. அப்போது நீதிபதி யு.யு.லலித் கூறியதாவது:

காலை 7 மணிக்கே மாணவர்கள் பள்ளி செல்லும்போது காலை 9 மணிக்கு நீதிபதிகள் பணிக்கு வர முடியாதா? முன்கூட்டியே நீதிமன்றத்துக்கு வந்தால் வழக்குகளை விரைந்து விசாரிக்க முடியும். காலை 9 மணிக்கு தொடங்கி பிற்பகல் 2 மணி வரை வழக்குகளை விசாரிக்கலாம். இடையில் 11.30 மணிக்கு அரைமணி நேரம் இடைவெளி விடலாம். பிற்பகலில் நீதிபதிகள் தங்கள் பணிகளை நீதிமன்றத்தில் மேற்கொள்ளலாம். இவ்வாறு நீதிபதி தெரிவித்தார்.

தற்போதைய தலைமை நீதிபதிஎன்.வி.ரமணா ஆகஸ்ட் 27-ம் தேதி ஓய்வு பெறுகிறார். அவருக்கு அடுத்து மூத்த நீதிபதி யு.யு.லலித் புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்க உள்ளார். அவர் பதவியேற்ற பிறகு உச்ச நீதிமன்ற பணி நேரத்தில் மாற்றம் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 mins ago

ஆன்மிகம்

14 mins ago

இந்தியா

18 mins ago

உலகம்

5 mins ago

கருத்துப் பேழை

4 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

இந்தியா

41 mins ago

உலகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

கல்வி

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்