மெல்ல மெல்ல அதிகரிக்கும் கரோனா: ஒரே நாளில்  44,230 பேருக்கு பாதிப்பு

By செய்திப்பிரிவு

இந்தியாவில் தினசரி கரோனா தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை 44,230 ஆக உள்ளது. கரோனா பாதிப்புக்குள்ளாகி சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 4,05,155 ஆக உள்ளது.

கடந்த 24 மணி கரோனா நிலவரம் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. இதன் விவரம் வருமாறு:

இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர்: 3,15,72,344

கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர்: 44,230

இதுவரை குணமடைந்தோர்: 3,07,43,972

கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர்: 42,360

கரோனா உயிரிழப்புகள்: 4,23,217

கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்தோர்: 555

சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை: 4,05,155

கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோர்: 45,60,33,754

இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE