ஆந்திராவில் தளர்வுகளுடன் 20-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு

By என். மகேஷ்குமார்

ஆந்திர மாநிலத்தில் 2-ம் அலை கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த மே மாதம் 5-ம் தேதி முதல் 18ம் தேதி வரை 18 மணி நேர ஊரடங்கை ஆந்திர அரசு அமல் படுத்தியது. மதியம் 12 மணி முதல் மறு நாள் காலை 6 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை மதுபான கடைகள் உட்பட அனைத்து கடைகளும் திறந்திருக்க அனுமதி வழங்கப் பட்டது. பஸ் போக்குவரத்து மட்டும் குறைக்கப்பட்டது.

பின்னர், கடந்த மே மாதம் 18ம் தேதியிலிருந்து 31-ம் வரையிலும், பின்னர் இம்மாதம் ஜூன்1-ம் தேதி முதல் 10-ம் தேதி வரையிலும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அமராவதியில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர், கரோனா தொற்று 9 ஆயிரத்தை விட குறைந்து வருவதால், ஊரடங்கை சற்று தளர்த்தலாம் என முடிவு செய்யப் பட்டது.

அதன்படி, வரும் 11-ம் தேதி முதல் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. அதன்பேரில் மதியம் 2 மணி வரை வணிக வளாகங்கள், கடைகள், அலுவலகங்கள் செயல்படும்.

இதேபோல, தெலங்கானா விலும் கரோனா தொற்று குறைந்து வருவதால் மாலை 5 மணி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை முதல்வர் சந்திரசேகர் ராவ் இன்று அறிவிக்கலாம் என்று கூறப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

27 mins ago

ஜோதிடம்

33 mins ago

விளையாட்டு

4 hours ago

வணிகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

தொழில்நுட்பம்

6 hours ago

சினிமா

7 hours ago

க்ரைம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்