ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் கடந்த ஓராண்டில் 3 கோடிக்கும் மேற்பட்ட குடிநீர்க் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டன
2024ஆம் ஆண்டுக்குள் கிராமங்களில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும், குடிநீர்க் குழாய் இணைப்பு வழங்கும் நோக்கில், ஜல் ஜீவன் திட்டத்தை பிரதமர் கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி அறிவித்தார்.
இத்திட்டம் மாநில அரசுகளுடன் இணைந்து கடந்த 2019ஆம் ஆண்ட ஆகஸ்ட் மாதம் முதல் அமல்படுத்தப்பட்டு வருகிறது. 2019 ஆகஸ்ட் 15ஆம் தேதி நிலவரப்படி, 18.93 கோடி கிராம வீடுகளில், 3.23 கோடி (17சதவீதம்) குடிநீர்க் குழாய் இணைப்பு இருந்தது.
அந்த ஆண்டில் ஒவ்வொரு வீட்டுக்கும் குடிநீர்க் குழாய் இணைப்பு வழங்க அனைத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களும் விரிவான திட்டங்களை வகுத்தன.
மாநிலங்களின் அயராத முயற்சிகள், ஜல் ஜீவன் திட்டம் கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலிருந்து இதுவரை 3 கோடி குடிநீர்க் குழாய் இணைப்புகள் வழங்க உதவின. மேலும், 26 மாவட்டங்கள், 457 வட்டாரப் பகுதிகள், 34,919 பஞ்சாயத்துக்கள் மற்றும் 65,627 கிராமங்களில் 100 சதவீத வீடுகளில் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டன. நாட்டில் 100 சதவீத குழாய் இணைப்புகள் வழங்கியதில் முதல் மாநிலமாக கோவா உருவானது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
3 hours ago
விளையாட்டு
3 hours ago
இந்தியா
3 hours ago
விளையாட்டு
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
உலகம்
5 hours ago
ஆன்மிகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago