கரோனா சிகிச்சை: 149 நாட்களில் மிகக் குறைவு

நாட்டில் கோவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை இன்று 3,52,586- ஆகக் குறைந்தது.

இது மொத்த பாதிப்பில் 3.57 சதவீதம். மேலும், இது கடந்த 149 நாட்களில் மிகக் குறைவான எண்ணிக்கையாகும். இதற்கு முன், கடந்த ஜூலை 18ம் தேதி கோவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 3,58,692- ஆக இருந்தது.

கடந்த 24 மணி நேரத்தில் 30,695 பேர் குணமடைந்துள்ளனர். 27,071 பேருக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் சிகிச்சை பெறுபவர்களின் மொத்த எண்ணிக்கையில் 3,960 குறைந்துள்ளது. கடந்த 17 நாட்களாக தினசரி பாதிப்பை விட, தினசரி குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 94 லட்சத்தை (93,88,159) நெருங்குகிறது. இதன் மூலம் குணமடைந்தோர் வீதம் 94.98 சதவீதமாக அதிகரித்துள்ளது. குணமடைந்தவர்களுக்கும், சிகிச்சை பெறுபவர்களுக்குமான இடைவெளி இன்று 9,035,573-ஆக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில், 336 பேர் உயிரிழந்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE