குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பெண்ணை பாலியல் பலாத்காரம்

உத்தரபிரதேச மாநிலம் முசாபர் நகரில் 26 வயது பெண்ணை 5 பேர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரில், அந்தப் பெண் ஒரு பரிசுப் பொருள் விற்பனைக் கடைக்குச் சென்ற போது அவருக்கு குளிர்பானம் ஒன்றை கடை முதலாளி கொடுத்துள்ளார். அதனை அருந்திய அந்தப் பெண் மயங்கினார். அதன் பிறகு கடை உரிமையாளர், கோட்வாலி சப்-இன்ஸ்பெக்டர் மகன் மற்றும் 3 பேர் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்தனர்.

மயக்கம் தெளிந்து அந்தப் பெண் விழித்த பிறகு, விஷயத்தை வெளியில் சொன்னால் பயங்கர விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று 5 பேரும் அவரை மிரட்டியுள்ளனர்.

பாலியல் பலாத்காரம் செய்ததாக அடையாளம் காணப்பட்ட 5 பேர் - விஜய்குமார், அனுஜ் சேத்தி, பியூஷ் குமார், சப்-இன்ஸ்பெக்டர் மகன் கபில் மற்றொரு நபர் ஒரு இளைஞர் ஆனால் பெயர் தெரியவில்லை என்று போலீஸ் அதிகாரி பிரமோத் குமார் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட பெண் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளார். வழக்கு தொடர்ந்து விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. குற்றவாளிகள் தப்பித் தலைமறைவாகியுள்ளனர். தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரி பிரமோத் குமார் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE