டெல்லியில் ஜீன்ஸ்; உ.பி.யில் சேலை: பிரியங்கா காந்தி குறித்து பாஜக எம்.பி. சர்ச்சைப் பேச்சு

By செய்திப்பிரிவு

டெல்லியில் ஜீன்ஸ் அணியும் பிரியங்கா காந்தி, உத்தரப் பிரதேசத்தில் சேலை கட்டிக்கொள்கிறார் என்று பாஜக எம்.பி.பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சோனியா காந்தியின் மகளும் ராகுல் காந்தியின் சகோதரியுமான பிரியங்கா காந்தி தீவிர அரசியலுக்கு வந்துள்ளார். பிரியங்காவை, ராகுல் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக நியமித்துள்ளார். இதனைக் கடுமையாகச் சாடி வரும் பாஜகவினர், தனிப்பட்ட ரீதியிலும் பிரியங்காவை விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் இதுகுறித்து உத்தரப் பிரதேசத்தின் பஸ்தி பகுதியில் பேசிய பாஜக எம்.பி. ஹரிஷ் திவேதி, ''டெல்லியில் பிரியங்கா காந்தி ஜீன்ஸ் அணிகிறார். ஆனால் உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட தொகுதிகளுக்கு வரும்போது சேலை கட்டிக்கொள்கிறார். குங்குமம் வைத்துக் கொள்கிறார்.

எனக்கோ பாஜகவுக்கோ பிரியங்கா காந்தி பிரச்சினை இல்லை. ராகுல் தோல்வி எனும்போது பிரியங்காவும் தோல்வி முகம்தான்'' என்று தெரிவித்தார்.

முன்னதாக பாஜக எம்எல்ஏ சுரேந்திர சிங், ராகுலை 'ராவணன்' என்றும் பிரியங்கா காந்தி 'சூர்ப்பனகை' என்றும் தெரிவித்திருந்தார். அதேபோல பிஹார் அமைச்சர் வினோத் நாராயண், 'பிரியங்காவுக்கு அழகான முகத்தைத் தவிர வேறு திறமைகள் இல்லை' என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE