பிரதமர் மோடி தனது தோல்விகளை மறைப்பதற்காக பழைய விஷயங்களைக் கொண்டு வந்து மக்களை திசை திருப்புகிறார் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து இன்று (சனிக்கிழமை) மாயாவதி தனது ட்விட்டர் பக்கத்ததில், ''வறுமையை ஒழிப்பது, வேலையில்லாத் திண்டாட்டம் ஆகிய இரண்டும்தான் மிகப்பெரிய பிரச்சினையாக இந்தத் தேர்தலில் உள்ளது. ஆனால், பிரதமர் மோடி தனது அரசின் தோல்வியை மறைப்பதற்காகவும் மக்களைத் திசை திருப்புவதற்காகவும் பழைய விஷயங்களைக் கொண்டு வருகிறார். இது மிகவும் கண்டிக்கத்தக்கது.
மக்கள் கவனமாக இருக்க வேண்டும்.உத்தரப் பிரதேசம் போன்ற பின்தங்கிய மாநிலங்களில் ஒரு அரசாங்கத்தின் நிதியை கல்வி, மருத்துவமனையின் தேவைக்காக பயன்படுத்த வேண்டும். ஆனால், பாஜக அரசு மக்கள் நலத் திட்டங்களைவிட விளம்பரத்திற்காக நிதியைப் பயன்படுத்துகிறது'' என்று தெரிவித்துள்ளார்.