நாடு முழுவதும் டிச. 18-ல் கிளாட் நுழைவுத் தேர்வு

By செய்திப்பிரிவு

சென்னை: தேசிய கல்வி நிறுவனங்களில் சட்டப் படிப்புகளில் சேருவதற்கான கிளாட் நுழைவுத் தேர்வு, டிச.18-ம் தேதி நடைபெற உள்ளது.

நம்நாட்டில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் 22 தேசிய சட்டப் பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் இளநிலை, முதுநிலை சட்டப் படிப்புகளில் சேர‘கிளாட்’ (Common Law Admission Test-CLAT) எனும் பொது சட்ட நுழைவுத் தேர்வில்கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். அதன்படி, அடுத்த கல்விஆண்டு (2023-24) மாணவர் சேர்க்கைக்கான கிளாட் தேர்வு,டிச.18-ம் தேதி நடத்தப்பட உள்ளது.

இதில் பங்கேற்க விருப்பமுள்ள மாணவர்கள், நவ.13-ம் தேதிக்குள் https://consortiumofnlus.ac.in/ என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணமாக பொதுப் பிரிவினர் ரூ.4 ஆயிரம்,எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.3,500 செலுத்த வேண்டும்.மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு 2 மணி நேரம் தேர்வு நடைபெறும்.

விண்ணப்பிக்கும் வழிமுறைகள் உட்பட கூடுதல்தகவல்களை மேற்கண்ட வலைதளத்தில் அறியலாம் என்றுதேசிய சட்ட பல்கலைக்கழங்களின் கூட்டமைப்பு தலைவர்பூனம் சக்ஸேனா தெரிவித்துஉள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 mins ago

விளையாட்டு

41 mins ago

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

3 hours ago

ஓடிடி களம்

4 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்