மாநகர போக்குவரத்துக் கழக ஐடிஐ-ல் மாணவர் சேர்க்கை: 10-ம் வகுப்பு தேறியவர்கள் சேரலாம்

By செய்திப்பிரிவு

மாநகர போக்குவரத்துக் கழக தொழிற்பயிற்சி நிறுவனத்தில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருவதாக மேலாண் இயக்குநர் அ.அன்பு ஆபிரகாம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

மாநகர போக்குவரத்துக் கழகத் தொழில் பயிற்சி நிறுவனம் சென்னை, குரோம்பேட்டையில் இயங்கி வருகிறது. மத்திய அரசின் அங்கீகாரம் (என்சிவிடி) பெற்ற இந்நிறுவனத்தில், 2 ஆண்டு கால மோட்டார் வாகன மெக்கானிக் பிரிவில் சான்றிதழ் படிப்பு வழங்கப்படுகிறது.

ஆண்டுதோறும் 72 இடங்கள் நிரப்பப்படுகின்றன. இங்கு இதுவரை 1,292 மாணவர்கள் பயிற்றுவிக்கப்பட்டுள்ளனர். இங்கு பயின்ற மாணவர்கள் பலர் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்றனர்.

தற்போது 2022-ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பப் படிவங்களை முதல்வர், மாநகர போக்குவரத்துக் கழகத் தொழிற்பயிற்சி நிலையம், மாநகர போக்குவரத்துக் கழக பயிற்சி நிலைய வளாகம், காந்தி நகர், குரோம்பேட்டை, சென்னை 600044 என்ற முகவரியிலும், www.mtcbus.tn.gov.in என்ற இணையதளத்தில் others----- Download என்ற பகுதியிலும் பெறலாம்.

இது தொடர்பான கூடுதல் விவரங்களைப் பெற 044 2953 5177, 94450 30597 ஆகிய எண்களிலும், mtciti591@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலமும் தொடர்புகொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

36 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

7 hours ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

1 hour ago

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

க்ரைம்

3 hours ago

மேலும்