செப்டம்பர் 23 முதல் 30-ம் தேதி வரை பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் வரும் செப்டம்பர் 23 முதல் 30-ம் தேதி வரை பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு நடைபெற உள்ளது. நடப்பு கல்வியாண்டில் 1 முதல் 10-ம் வகுப்புகளுக்கு கடந்த ஜூன் 13-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன.

தொடர்ந்து, 12-ம் வகுப்புக்கு ஜூன் 20-ம் தேதியும், 11-ம் வகுப்புக்கு ஜூன் 27-ம் தேதியும் வகுப்புகள் தொடங்கப்பட்டன.

அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும், முதல் பருவத் தேர்வுகள் கடந்த மாதம் நடத்திமுடிக்கப்பட்டன. நடப்பு கல்விஆண்டுக்கான நாள்காட்டியை பள்ளி திறப்புக்கு முன்னரே தமிழக அரசு வெளியிட்டது.

அதில், பள்ளிஇயங்கும் நாட்கள், விடுமுறை விவரங்கள், காலாண்டு,அரையாண்டு, பொதுத்தேர்வு நடைபெறும் நாட்கள் உள்ளிட்டதகவல்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன. மேலும், காலச் சூழலுக்கேற்ப தேதிகளில் மாற்றம் செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தற்போது காலாண்டுத் தேர்வு தேதிகளை பள்ளிக்கல்வித் துறை உறுதிசெய்துள்ளது. அதன்படி, 11, 12-ம் வகுப்புக்கு காலாண்டுத் தேர்வுகள் செப்டம்பர் 23 முதல் 30-ம் தேதி வரையும், 1 முதல் 10-ம் வகுப்புகளுக்கு செப்டம்பர் 26 முதல் 30-ம் தேதி வரையும் நடைபெற உள்ளது.

தொடர்ந்து, மாணவர்களுக்கு காலாண்டு மற்றும் ஆயுத பூஜை விடுமுறை அக்டோபர் 1 முதல் 5-ம் தேதி வரை வழங்கப்படும்.

மீண்டும் அக். 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். இதற்கான விரிவான காலஅட்டவணை மாவட்டம் வாரியாக பள்ளிகளுக்கு வழங்கப்படும். 10, 11, 12-ம்வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு போலவே காலாண்டுத் தேர்வுகளை நடத்த வேண்டும். இதற்கான வினாத்தாள்கள் தேர்வுத் துறை மூலம் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று கல்வித் துறை தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

50 mins ago

சினிமா

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

3 hours ago

வாழ்வியல்

4 hours ago

தமிழகம்

4 hours ago

ஆன்மிகம்

3 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

மேலும்