ராமநாதபுரம்: முதுகுளத்தூர் அருகே கிராம அரசு தொடக்கப் பள்ளியை மூடாமல் இருக்க, தனியார் பள்ளிகளில் படித்துவந்த குழந்தைகளை கிராமத்தினர் அரசுப் பள்ளியில் சேர்த்தனர். அம்மாணவர்களுக்கு துண்டு, மாலை அணிவித்து கிராமத்தினர் பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே எம்.கொட்டக்குடி கிராமத்தில் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி உள்ளது. ஓராசிரியர் கொண்ட இப்பள்ளியில், 6 மாணவர்கள் மட்டுமே பயில் கின்றனர். மாணவர்கள் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்ததால், பள்ளியை மூடும் அவல நிலை ஏற்பட்டது. இதைத் தடுக்க, கிராமத்தினர் கூட்டம் நடத்தினர்.
அதில், எம்.கொட்டக்குடி கிராமத்திலிருந்து, கமுதி, முதுகுளத்தூர், அபி ராமம், பரமக்குடி உள்ளிட்ட நகர் பகுதிகளில் உள்ள தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் பயின்ற 25 மாணவ, மாணவிகள் அனைவரையும், தங்களது கிராம அரசுப் பள்ளியில் தமிழ் வழிக் கல்வி பயில அனுப்புவது எனத் தீர்மானிக்கப்பட்டது.
அதன்படி, அரசு தொடக்கப் பள்ளிக்குச் சென்ற புதிய மாணவ, மாணவிகளுக்கு, பெற்றோர், முதுகுளத்தூர் முன்னாள் எம்எல்ஏ மலேசியா பாண்டியன், பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் தர்மராஜன் உள்ளிட்டோர் துண்டு, பூ மாலை அணிவித்து அனுப்பி வைத்தனர். இம்மாணவர்களை, தலைமை ஆசிரியர் முத்துக்கிருஷ்ணன் வரவேற்றார்.
இது குறித்து பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் தர்மராஜன் கூறுகையில், "மூடப் படவிருந்த இப்பள்ளியில் தற்போது 31 மாணவ, மாணவிகள் படிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, 2 ஆசிரி யர்களை நியமிக்க வேண்டும். ஸ்மார்ட் வகுப்பறை உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்த அரசு முன்வர வேண்டும்" என்றார்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
18 mins ago
ஜோதிடம்
23 mins ago
இந்தியா
5 hours ago
க்ரைம்
6 hours ago
சினிமா
6 hours ago
இந்தியா
7 hours ago
வணிகம்
7 hours ago
இந்தியா
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
இந்தியா
8 hours ago