கோவை: கோவை ஆர்எஸ்புரம் மேற்கு பொன்னுரங்கம் சாலையை சேர்ந்தவர் பியூஸ் ஜெயின்(35). நகைப் பட்டறை நடத்தி வருகிறார். இவரது பட்டறையில் மேற்கு வங்கத்தை சேர்ந்த சதாம் உசேன் என்பவர் வேலை செய்து வந்தார்.
பியூஸ் ஜெயின் பட்டறையில் உள்ள நகைகளை ‘லேசர் சாலிடரிங்’ செய்வதற்கு அருகிலுள்ள நகை கடையில் கொடுப்பது வழக்கம். இந்த பணியை சதாம் உசேன் மேற்கொள்வார். கடந்த சில நாட்களுக்கு முன் வழக்கம் போல சதாம் உசேனிடம் ரூ.25 லட்சம் மதிப்புள்ள 622 கிராம் எடையுள்ள பிரேஸ்லெட், கம்மல் உள்ளிட்ட தங்க நகைகளை கொடுத்தனுப்பினார்.
ஆனால் நீண்ட நேரமாகியும் சதாம் உசேன் திரும்பி வரவில்லை. அவரது செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பாக, ஆர்எஸ்புரம் காவல் நிலையத்தில் பியூஸ் ஜெயின் புகார் அளித்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
வாழ்வியல்
9 mins ago
தமிழகம்
51 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
3 hours ago
விளையாட்டு
9 hours ago
சினிமா
10 hours ago
இந்தியா
11 hours ago
தமிழகம்
12 hours ago