அருப்புக்கோட்டை பாலியல் வழக்கு: நீதிமன்றத்தில் 2 பேர் சரண்

By செய்திப்பிரிவு

பாலியல் வழக்கில் தேடப்பட்ட 2 பேர் விருதுநகர் நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தனர்.

அருப்புக்கோட்டை அருகே பாலவனத்தம் பகுதியில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் 3 நாட்களுக்கு முன் காரில் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். மேலும் அவர் அணிந்திருந்த 5 பவுன் தங்க நகையையும் மர்ம கும்பல் பறித்துச் சென்றது.

இது குறித்து அருப்புக்கோட்டை தாலுகா போலீஸார் வழக்கு பதிவு செய்து 5 பேரை கைது செய்தனர்.

இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த அருப்புக்கோட்டையைச் சேர்ந்த விஜய் மற்றும் பிரபாகரன் ஆகியோர் விருதுநகரில் உள்ள 2-வது நீதித்துறை நடுவர் மன்றத்தில் நேற்று சரணடைந்தனர். அவர்கள் இருவரையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதித்துறை நடுவர் நிஷாந்தினி உத்தரவிட்டார்.

இருவரும் விருதுநகர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

43 mins ago

விளையாட்டு

1 hour ago

சினிமா

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

சினிமா

7 hours ago

இந்தியா

8 hours ago

மேலும்