பாலியல் வழக்கில் தேடப்பட்ட 2 பேர் விருதுநகர் நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தனர்.
அருப்புக்கோட்டை அருகே பாலவனத்தம் பகுதியில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் 3 நாட்களுக்கு முன் காரில் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். மேலும் அவர் அணிந்திருந்த 5 பவுன் தங்க நகையையும் மர்ம கும்பல் பறித்துச் சென்றது.
இது குறித்து அருப்புக்கோட்டை தாலுகா போலீஸார் வழக்கு பதிவு செய்து 5 பேரை கைது செய்தனர்.
இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த அருப்புக்கோட்டையைச் சேர்ந்த விஜய் மற்றும் பிரபாகரன் ஆகியோர் விருதுநகரில் உள்ள 2-வது நீதித்துறை நடுவர் மன்றத்தில் நேற்று சரணடைந்தனர். அவர்கள் இருவரையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதித்துறை நடுவர் நிஷாந்தினி உத்தரவிட்டார்.
இருவரும் விருதுநகர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
முக்கிய செய்திகள்
தொழில்நுட்பம்
43 mins ago
விளையாட்டு
1 hour ago
சினிமா
2 hours ago
தமிழகம்
3 hours ago
விளையாட்டு
5 hours ago
இந்தியா
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
சினிமா
7 hours ago
இந்தியா
8 hours ago