சென்னை: பெண் காவலரிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட வழிப்பறி கொள்ளையர்கள் இருவரை எழும்பூர் போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை, புதுப்பேட்டையில் வசிப்பவர் ஆயுதப்படை பெண் காவலர் பிரியா (25). இவர் கடந்த 18-ம் தேதி தனது இருசக்கர வாகனத்தில் எழும்பூர், பழைய காவல் ஆணையாளர் அலுவலக சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அவரைப் பின் தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் பிரியாவை தாக்கிவிட்டு அவரது கழுத்தில் அணிந்திருந்த தங்கச் செயினை பறித்துக் கொண்டு தப்பினர்.
அதிர்ச்சி அடைந்த பிரியா இதுகுறித்து எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். முதல் கட்டமாக சம்பவ இடத்தின் அருகில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.
அதன் அடிப்படையில் பெண் காவலரிடம் நகைப் பறிப்பில் ஈடுபட்டதாக வியாசர்பாடியைச் சேர்ந்த முகமது முஸ்தபா (20), புளியந்தோப்பு ஆட்டு தொட்டியைச் சேர்ந்த அப்துல் (24) ஆகிய இருவரையும் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள ஸ்பீடு அஜித் என்பவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
மேலும், விசாரணையில் கைது செய்யப்பட்ட முகமது முஸ்தபா மீது 3 வழக்குகளும், அப்துல் மீது 2 வழக்குகள் உள்ளதும் தெரியவந்துள்ளது. மதுப்பழக்கத்துக்கு அடிமையான அவர்கள் மது குடிக்க பணம் வேண்டி செயில் பறிப்பில் ஈடுபட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
35 mins ago
க்ரைம்
33 mins ago
விளையாட்டு
1 hour ago
தமிழகம்
54 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
க்ரைம்
2 hours ago
சுற்றுச்சூழல்
2 hours ago
இந்தியா
2 hours ago
சினிமா
2 hours ago
இந்தியா
3 hours ago