புதுச்சேரியில் சொத்து தகராறால் பெற்றோரை எரித்துகொன்ற வளர்ப்பு மகள், மருமகன் - இரட்டை ஆயுள் தண்டனை விதிப்பு

By செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: சொத்து தகராறால் வளர்ப்பு பெற்றோரை எரித்து கொன்ற மகள், மருமகனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து புதுச்சேரி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

புதுச்சேரி மேட்டுபாளையம் தருமாபுரி அகத்தியர் கோட்டத்தைச் சேர்ந்த தம்பதி நாராயணசாமி (74) - வசந்தா (62). நாராயணசாமி தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவர்களுக்கு குழந்தை இல்லாததால் நாராயணசாமி தனது தங்கை மகள் ஆனந்தியை தத்தெடுத்தார். அதன் பின்னர் நாராயணசாமி-வசந்தா தம்பதியுடன் ஆனந்தி, அவரது கணவர் முருகவேல் ஆகியோர் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.

இந்நிலையில் அவர்கள் வசித்த வீட்டை தனது பெயருக்கு எழுதிதர வளர்ப்பு மகள் ஆனந்தி கோரினார். இதனால் இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இப்பிரச்சினை மேட்டுபாளையம் காவல்நிலையம் வரை சென்று சமரசம் செய்யப்பட்டது. கடந்த 2012ல் நாராயணசாமி-வசந்தா தம்பதி தங்கள் வீட்டில் தீயில் கருகிய நிலையில் இறந்திருந்தனர். போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில், இருவரையும் அவர்களது வளர்ப்பு மகள் ஆனந்தி (37), அவரது கணவர் முருகவேல் (39) உடன் இணைந்து கொலை செய்து சடலங்களுக்கு தீ வைத்தது தெரிந்தது.

இச்சம்பவத்தில் இவர்களுடன் ஆனந்தியின் மாமனார் ரத்தினம், அடைக்கலம் தந்த குமார் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கு விசாரணை முடிந்த நிலையில், புதுசேஹ்ரி மூன்றாவது மாவட்ட கூடுதல் நீதிபதி இளவரசன் முன்னிலையில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. தீர்ப்பில் ஆனந்தி, முருகவேலின் மீதான குற்றம் உறுதி செய்யப்பட்டதுடன், அவர்கள் இருவருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. எனினும், ஆனந்தியின் மாமனார் ரத்தினனும், அடைக்கலம் தந்த குமாரும் விடுதலை செய்யப்பட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 mins ago

தமிழகம்

20 mins ago

தமிழகம்

33 mins ago

தமிழகம்

43 mins ago

சினிமா

59 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

தமிழகம்

1 hour ago

மேலும்