திருப்பத்தூரில் சிறுமியை கடத்தியவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
திருப்பத்தூர் வரதராஜ கோயில் தெருவை சேர்ந்தவர் உஸ்மான் (25). இவர் அதே பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியை திருமண ஆசை வார்த்தை கூறி கடந்த சில நாட் களுக்கு முன்பு கடத்திச் சென்றாக கூறப்படுகிறது.
இது குறித்து சிறுமியின் தந்தை திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், உஸ்மான் தான் தன் மகளை கடத்திச்சென்றதாக அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில், வழக்குப்பதிவு செய்த மகளிர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், திருப்பத்துார் பேருந்து நிலையம் அருகே சுற்றித்திரிந்த உஸ்மானை பிடித்து விசாரணை செய்ததில், திருப்பத்துார் அருகே வீடு வாடகைக்கு எடுத்து சிறுமியுடன் வசித்து வந்தது தெரியவந்தது.
இதையடுத்து, சிறுமியை மீட்ட மகளிர் காவல் துறையினர் பெற்றோரிடம் ஒப்படைத்தனர். பிறகு, உஸ்மான் மீது போக்சோ சட்டம் பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
28 mins ago
ஜோதிடம்
47 mins ago
விளையாட்டு
6 hours ago
இந்தியா
6 hours ago
தமிழகம்
7 hours ago
விளையாட்டு
7 hours ago
இந்தியா
8 hours ago
விளையாட்டு
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
உலகம்
10 hours ago
ஆன்மிகம்
10 hours ago