ஸ்ரீவில்லி.யில் மர்மமான முறையில் 7-ம் வகுப்பு மாணவன் தற்கொலை

By செய்திப்பிரிவு

ஸ்ரீவில்லிபுத்தூரில் மாணவர் ஒருவர் மர்மமான முறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் என்ஜிஜிஓ காலனியைச் சேர்ந்தவர் விஜய நாயகம். ஆடிட்டர். இவரது மனைவி சுரேகா. இவர்கள் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களுக்கு 10 ஆண்டுகளுக்குப் பிறகு சிவபிரசாத்(13) என்கிற மகன் பிறந்தார். இச்சிறுவன் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். வகுப்பில் முதல் மதிப்பெண் மற்றும் ஆன் லைன் வகுப்புகளிலும் சிறந்து விளங்கி னார்.

இந்நிலையில், நேற்று முன் தினம் காலை வழக்கம்போல் விஜயநாயகம் அலுவலகத்துக்குச் சென்றார். சுரேகா துணிகளை துவைத்து அதை காய வைப்பதற் காக மொட்டை மாடிக்குச் சென் றார். அப்போது வீட்டில் சிவ பிரசாத் ஆன்லைன் வகுப்பில் இருந்தார்.

சற்று நேரம் கழித்து சுரேகா வந்து பார்த்தபோது தூக்கில் தொங்கிய நிலையில் சிவபிரசாத் மயங்கிக் கிடந்தார். சுரேகா மற்றும் அருகில் இருந்தவர்கள் சிவபிரசாத்தை ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்துவிட்டு சிறுவன் இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர்.

தனது மகன் இறப்பில் சந்தேகம் உள்ளதாக ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் விஜய நாயகம் புகார் அளித்தார். இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 mins ago

தமிழகம்

17 mins ago

தமிழகம்

43 mins ago

தமிழகம்

52 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்