கரோனா பயத்தால் வயதான தம்பதி தற்கொலை: விருதுநகரில் சோகம்

By இ.மணிகண்டன்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே கரோனா தொற்று அச்சத்தால் வயதான தம்பதி விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்டனர்.

சிவகாசி அருகே உள்ள ஜமீன்சல்வார்பட்டியைச் சேர்ந்தவர் பெருமாள் (70). இவரது மனைவி தெய்வானை (62). இவர்களுக்கு 2 மகன்களும் 2 மகள்களும் உண்டு.

மூத்த மகன் இறந்துவிட்டதால் இளைய மகன் மகன் முத்துமணியின் வீட்டில் இருவரும் வசித்து வந்தனர். மகள்கள் இருவரும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர்.

மூதாட்டி தெய்வானைக்கு சர்க்கரை நோய் இருந்துள்ளது. இதனால் உடல்நிலை பாதிக்கப்பட்டு மிகவும் சிரமப்பட்டு வந்துள்ளார். இதனால் மன வேதனையடைந்து தான் இப்படி உயிர்வாழ்வதற்கு இறந்துவிடலாம் எனக் கூறி கணவர் பெருமாளிடம் அடிக்கடி புலம்பி வந்துள்ளார்.

பெருமாளும் அவருக்கு ஆறுதல் கூறி மாத்திரைகள் கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த வாரம் பெருமாளுக்கும் உடல்நிலை பாதிக்கப்பட்டது.

இருவரும் தங்களுக்கு கரோனா தொற்று இருக்குமோ என்ற அச்சத்தில் நாங்கள் பிழைக்க மாட்டோம் எனக் கூறி வெளியூரில் உள்ள மகள்களை பார்க்க வருமாறு அழைத்துள்ளனர். அதையடுத்து, கடந்த 2 நாள்களுக்கு முன் மகள்கள் சாந்தி, அய்யம்மாள் ஆகியோர் வந்து பெருமாளையும் தெய்வானையையும் பார்த்து ஆறுதல் கூறியுள்ளனர். மருத்துவமனைக்குப் போய் பரிசோதனை செய்துபார்க்கலாம் என மகள்கள் கூறியபோது அதற்கெல்லாம் பணம் அதிகம் செலவாகும் என பெருமாளும் தெய்வானையும் கூறியுள்ளனர்.

இந்நிலையில், மகள்கள் இருவரும் சமைத்துக்கொண்டிருக்கும்போது மருந்து வாடை வீசியுள்ளது. சந்தேகமடைந்த சாந்தியும் அய்யம்மாளும் ஓடிச்சென்று பார்த்தபோது தாய், தந்தை இருவரும் பூச்சிக்கொள்ள மருந்தான ரோக்கர் மருந்தை குடித்துள்ளனர்.

அதையடுத்து, அருகிலிருந்தவர்கள் உதவியோடு பெருமாளையும் தெய்வானையையும் மீட்டு ஆம்புலென்ஸ் மூலம் சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டுவந்து சேர்த்தனர்.

பின்னர், மேல் சிகிச்சைக்காக இருவரும் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். சிகிச்சையிலிருந்த பெருமாளும் அவரது மனைவி தெய்வானையும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதுகுறித்து சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

ஜோதிடம்

8 hours ago

ஜோதிடம்

8 hours ago

ஜோதிடம்

8 hours ago

மேலும்