ஊராட்சிகள் உதவி இயக்குனர் கார் ஓட்டுனர் வீட்டில் ரூ.2.94 லட்சம் பறிமுதல்

By இ.மணிகண்டன்

விருதுநகரில் ஊராட்சிகள் உதவி இயக்குநர் கார் ஓட்டுனரின் வீட்டில் கணக்கில் வராத ரூ.2.94 லட்சத்தை லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீசார் இன்று பறிமுதல் செய்தனர்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கீழ் ஊராட்சிகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புப் பிரிவு டி.எஸ்.பி. கருப்பையா, இன்ஸ்பெக்டர் விமலா தலைமையிலான போலீஸார் நேற்று திடீர் சோதனை நடத்தினர். அப்போது, அலுவலகத்திலிருந்து கணக்கில் வராத ரூ.2 லட்சத்து 26 ஆயிரத்து 500 பறிமுதல் செய்யப்பட்டது.

இதுகுறித்து, லஞ்ச ஒழிப்புப் போலீஸார் வழக்குப் பதிவுசெய்து ஊராட்சிகள் உதவி இயக்குநர் விஷ்ணுபரன், கார் ஓட்டுனர் சரவணகுமார் ஆகியோரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

அதைத்தொடர்ந்து குளக்கரை மற்றும் நாகர்கோவிலில் உள்ள ஊராட்சிகள் உதவி இயக்குனர் விஷ்ணுபரன் இல்லங்களிலும், வி. சுந்தரலிங்கபுறத்தில் உள்ள கார் ஓட்டுநர் சரவணகுமார் இல்லத்திலும் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் இன்று சோதனை நடத்தினர்.

இதில் கார் ஓட்டுனர் சரவணகுமாரின் வீட்டில் கணக்கில் வராத ரூ.2.94 லட்சத்தை லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

4 mins ago

வாழ்வியல்

9 mins ago

ஜோதிடம்

35 mins ago

க்ரைம்

25 mins ago

இந்தியா

39 mins ago

சுற்றுலா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

1 hour ago

மேலும்