‘ஜீவசமாதி’ சாமியாரை பார்க்கச் சென்ற இளைஞர் விபத்தில் சிக்கி உயிரிழப்பு

By இ.ஜெகநாதன்

சிவகங்கை

ஜீவசமாதி அடைவதாகக் கூறிய 'சாமியாரை' பார்க்கச் சென்றபோது விபத்தில் சிக்கிய,இளைஞ ர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

சிவகங்கை அருகே சிவகங்கை மாவட்டம், முடிகண்டம் அருகிலுள்ள பாசாங்கரை கிராமத்தில் 'சாமியார்' ஒருவர், குறிப்பிட்ட தேதி முடிவு செய்து, அன்றைக்கு ஜீவசமாதி அடையப்போவதாக அறிவித்தார். இதையொட்டி சிவகங்கை, படமாத்தூர் உட்பட சுற்று வட்டார கிராமத்தில் கூட்டம், கூட்டமாக பாசங்கரைக்கு சென்று அவரைப் பார்த்துவிட்டுச் சென்றனர்.

இந்த தகவல் அறிந்த திருப்புவனம் அருகிலுள்ள கே.பெத்தானேந்தல் காலனியைச் சேர்ந்த உடையப்பன் மகன் பழனிக்குமார் (20), அவரது உறவினரான மீனாட்சி சுந்தரம் மகன் முனீஸ்பாண்டி(19) இருவரும் கடந்த வியாழக்கிழமை இரவு 8 மணிக்கு ஒரே மோட்டார் சைக்கிளில் பாசங்கரை கிராமத்துக்குப் புறப்பட்டுச் சென்றனர்.

கானூரை அடுத்து கல்லூரி விலக்கு என்ற இடத்தில் அவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையோரம் நடப்பட்டு இருந்த மைல் கல் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டனர்.

இதில் தலையில் பலத்த காயம் அடைந்த பழனிக்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். முனீஸ் பாண்டி லேசான காயத்துடன் உயிர் தப்பினார். விபத்து பற்றித் தகவல் அறிந்து வந்த திருப்பாச்சேத்தி போலீஸார் பழனிகுமார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து திருப்பாச்சேத்தி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஜீவ சமாதி அடையப்போவதாக 'சாமியார்' அறிவித்த செய்தியால், அவரைப்பார்க்கும் ஆர்வத்தில் வந்த இளைஞர் ஒருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

3 hours ago

சினிமா

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்