என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட பிரபல ரவுடி வெள்ளை ரவியின் மகன் மீது கடுமையான தாக்குதல்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவர் கோகுல்ராஜ் (26). இவர், போலீஸாரால் என்கவுன்டரில் கொல்லப்பட்ட பிரபல ரவுடியான வெள்ளை ரவியின் மகன். இவர் தனது மனைவியுடன் நேற்று முன்தினம் அதே பகுதியில் உள்ள பொன்னப்பன் தெரு வழியாக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த குமார் என்பவர் மீது கோகுல்ராஜ் உரசுவதுபோல் சென்றுள்ளார். இதில், இருதரப்பினரிடையே வாய் தகராறுஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரம்அடைந்த குமார் தனது நண்பர்களுடன் சேர்ந்து கோகுல்ராஜை சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும், மறைத்து வைத்திருந்த கத்தியாலும் சரமாரியாக தாக்கி உள்ளனர்.இதில், கோகுல்ராஜ் பலத்த காயம்அடைந்தார். தடுக்க முயன்ற அவரது மனைவி மற்றும் நண்பர்களுக்கும் வெட்டு விழுந்தது.

காயமடைந்தவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். தாக்குதல் குறித்து செம்பியம் போலீஸார் வழக்குப் பதிந்து தலைமறைவான கும்பலை தேடி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

44 mins ago

இந்தியா

1 hour ago

வணிகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

இணைப்பிதழ்கள்

3 hours ago

க்ரைம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

உலகம்

5 hours ago

இந்தியா

6 hours ago

சினிமா

5 hours ago

மேலும்