சென்னை | காரில் சென்ற பெண்ணை தாக்கியதாக ரவுடி உட்பட 2 பேர் கைது

By செய்திப்பிரிவு

சென்னை: காரில் சென்ற பெண் மீது தாக்குதல் நடத்தியதாக ரவுடி உள்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை மாதவரம் பஜனை கோயில் தெருவை சேர்ந்தவர் தீனா (33). இவர், தனது தம்பி ஹரிபாபு, 2-வது தம்பியின் மனைவி ஐஸ்வர்யா ஆகியோருடன் மாதவரம் பொன்னியம்மன் மேடு நடசக்தி கடம்பாவு அம்மன் கோயில் அருகே காரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, சாலையில் நின்று கொண்டிருந்த 2 பேர், தீனாவின் காருக்கு வழிவிடாமல் மறித்து நின்றனர். இதுகுறித்து கேட்டபோது, வாக்குவாதம் ஏற்பட்டது.

சரமாரியாக தாக்குதல்: ஆத்திரம் அடைந்த அந்த நபர்கள், தீனா உள்பட காரில் இருந்த 3 பேரையும் சரமாரியாக தாக்கினர். காரையும் சேதப்படுத்தினர். அத்துடன், காரிலிருந்த ஐஸ்வர்யாவை பாலியல் ரீதியில் சீண்டியுள்ளனர்.

தாக்குதலில் காயமடைந்த 3 பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய தீனா, இதுகுறித்து மாதவரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்படி, போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.

சரித்திரப் பதிவேடு குற்றவாளி: இதில், தீனாவிடம் தகராறு செய்துவிட்டு தப்பியது மாதவரத்தைச் சேர்ந்த வினோத் (28), விக்னேஷ் (28) என்பது தெரியவந்தது. இருவரையும் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட வினோத், மாதவரம் காவல் நிலைய சரித்திரப் பதிவேடு குற்றவாளி என்பதும், இவர் மீது 2 அடிதடி மற்றும் 3 வழிப்பறி வழக்குகள் உட்பட 5 வழக்குகள் உள்ளதும் விசாரணையில் தெரியவந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

17 mins ago

தமிழகம்

40 mins ago

சினிமா

12 mins ago

சினிமா

36 mins ago

சுற்றுச்சூழல்

52 mins ago

சினிமா

49 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

7 mins ago

இந்தியா

2 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்