அருப்புக்கோட்டை அருகே சகோதரிகள் இருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை - 5 பேர் மீது வழக்கு பதிவு

By செய்திப்பிரிவு

அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் அருப்புக் கோட்டை அருகே சகோதரிகள் இருவரை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாக 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது.

அருப்புக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் தனக்குத் தெரிந்த இளம் பெண்களான சகோதரிகள் இருவரிடம் சென்று `உங்கள் மாமாவுக்கு விபத்து ஏற்பட்டுள்ளது' என்று கூறி இருவரையும் ஏமாற்றி, பைக்கில் காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. அங்கு, மறைந்திருந்த 4 இளைஞர்கள் ராஜ் குமாரை அடிப்பது போல லேசாக தாக்கி உட்காரவைத்துவிட்டு, இளம் பெண்கள் இருவரையும் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்ட இளம் பெண்கள் இருவரும் அருப்புக்கோட்டை நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக ராஜ்குமார் மற்றும் 4 இளைஞர்கள் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், வழக்கில் தொடர்புடைய 3 பேரைப் பிடித்து, போலீஸார் ரகசிய இடத்தில் விசாரணை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

29 mins ago

சுற்றுச்சூழல்

1 hour ago

உலகம்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

சினிமா

4 hours ago

க்ரைம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்