மும்பை விமான நிலையத்தில் கடந்த 3 நாட்களில் ரூ.8.7 கோடி மதிப்புள்ள தங்கம் சிக்கியது

By செய்திப்பிரிவு

மும்பை: கடந்த 3 நாட்களில் ரூ.8.7 கோடி மதிப்புள்ள தங்கம் மும்பை சுங்கத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் மும்பை விமான நிலையத்தில் கடத்தல் தங்கம் கொண்டு வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிகாரிகள் பயணிகளிடம் கடந்த 3 நாட்களாக தீவிர சோதனை நடத்தினர். இதன்மூலம் 15.89 கிலோ எடையுள்ள தங்கத்தை அவர்கள் பறிமுதல் செய்துள்ளனர். இதன் மதிப்பு ரூ.8.7 கோடியாகும்.

இத்தகவலை விமான நிலைய ஆணையரகம் மும்பை சுங்கத்துறையின் 3-வது மண்டலம் வெளியிட்டுள்ளது. பல்வேறு பயணிகளின் ஆடைகள், பெட்டிகள், உடைமைகள், பயணிகளின் உடல் பகுதிகளில் மறைத்து வைத்து இந்த தங்கம் கடத்தி வரப்பட்டதாக தெரியவந்துள்ளது.

கடந்த மாதம் 18-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை மும்பை விமானநிலையத்தில் நடத்திய சோதனையில் ரூ.4 கோடி மதிப்புள்ள 8 கிலோவுக்கும் அதிகமான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

33 mins ago

இந்தியா

1 hour ago

கல்வி

3 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

தமிழகம்

10 hours ago

சினிமா

10 hours ago

சுற்றுச்சூழல்

11 hours ago

உலகம்

11 hours ago

வாழ்வியல்

12 hours ago

விளையாட்டு

13 hours ago

விளையாட்டு

13 hours ago

மேலும்