சென்னை | போலி ஆவணம் மூலம் ரூ.5 கோடி நிலம் மோசடி: தாய் - மகன் உட்பட 4 பேர் கைது

By செய்திப்பிரிவு

சென்னை: போலி ஆவணம் மூலம் ரூ.5 கோடி மதிப்புள்ள நிலம் மோசடி செய்யப்பட்ட வழக்கில் தாய், மகன் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை கந்தன்சாவடியைச் சேர்ந்தவர் ஏ.எல்.சிதம்பரம். இவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்று அளித்தார். அதில், தனக்கு சொந்தமான ரூ.5 கோடி மதிப்புள்ள நிலத்தை சென்னை கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கத்தைச் சேர்ந்த தியாகராஜன் (45), பள்ளிக்கரணையைச் சேர்ந்த ஹேமலதா (55), அவரது மகன் ராஜசேகர் (31), கல்பாக்கம் சேகர் (55) ஆகிய 4 பேரும் போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்து விட்டனர். எனவே, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்து இருந்தார்.

இதுகுறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள நில மோசடி விசாரணை பிரிவு காவல் ஆய்வாளர் தனலட்சுமி தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தினர். இதில், மோசடி நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, புகாருக்குள்ளான 4 பேரையும் போலீஸார் கைது செய்தனர். விசாரணை நடக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 mins ago

இந்தியா

13 mins ago

இந்தியா

17 mins ago

இந்தியா

33 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்