சென்னை : தமிழகத்தில் இன்று ஆண்கள் 44, பெண்கள் 45 என மொத்தம் 89 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 30 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 34 லட்சத்து 54,306 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 34 லட்சத்து 15,782 பேர் குணமடைந்துள்ளனர். இன்று மட்டும் 64 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றனர். தமிழகம் முழுவதும் 499 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று உயிரிழப்பு இல்லை. தமிழகத்தில் நேற்று கரோனா தொற்று பாதிப்பு 64 ஆகவும், சென்னையில் 34 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. நேற்றுடன் ஒப்பிடும்போது இன்று பாதிப்பு அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 3,805 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,168 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4,25,54,416 என அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் கரோனா தொற்றால் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 20,303 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 4,87,544 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
34 mins ago
தமிழகம்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
3 hours ago
விளையாட்டு
6 hours ago
இந்தியா
7 hours ago
விளையாட்டு
8 hours ago
சினிமா
8 hours ago
சுற்றுச்சூழல்
9 hours ago
விளையாட்டு
10 hours ago
இந்தியா
12 hours ago
வலைஞர் பக்கம்
13 hours ago