தனுஷுடன் மீண்டும் இணையும் மித்ரன் ஜவஹர்?

By செய்திப்பிரிவு

சென்னை: நடிகர் தனுஷ் மற்றும் இயக்குநர் மித்ரன் ஜவஹர் கூட்டணி மீண்டும் இணைந்து புதிய படத்திற்காக பணியாற்ற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தனுஷ் நடிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி ஹிட்டடித்த படம் ‘திருச்சிற்றம்பலம்’. இந்தப்படத்தில் நித்யா மேனன், ராஷி கண்ணா, பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கடந்த ஆண்டில் ரூ.100 கோடி வசூலைக்குவித்தது இப்படம். இந்நிலையில், இந்தப் படத்தைத் தொடர்ந்து நடிகர் தனுஷூடன் இயக்குநர் மித்ரன் ஜவஹர் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் தனுஷின் 50-வது படம் குறித்தான அறிவிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்தப் படத்தை நடிகர் தனுஷே இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

’பவர் பாண்டி’ படத்திற்குப் பிறகு நடிகர் தனுஷ் ‘ராயன்’ என்ற கதையை இயக்க முன்னெடுத்து அது கைவிடப்பட்டது. இந்தக் கதையா அல்லது வேறு கதையை இயக்க இருக்கிறாரா என்பது இன்னும் உறுதியாகவில்லை. தற்போது இயக்குநர் மித்ரன் ஜவஹர் தனுஷூடன் இணைந்து திரைக்கதையில் பணியாற்ற இருக்கிறார். ‘யாரடி நீ மோகினி’, ‘குட்டி’ உள்ளிட்டப் படங்களுக்குப் பிறகு இவர்கள் ஐந்தாவது முறையாக இணைய இருப்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

16 mins ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

1 hour ago

சினிமா

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்