1978-ம் ஆண்டில் இயக்குநர் ருத்ரய்யா நமக்கெல்லாம் ஒரு கதை சொல்கிறார். அந்தக் கதையில் இந்த 'சோ கால்டு' சொசைட்டி சென்சார் செய்த சொற்களையெல்லாம் தேடிப்பிடித்து கோத்து வார்த்தையாக்கி வசனங்களாக வைக்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக, எந்த மாதிரியான பெண் கதாபாத்திரத்தை இச்சமூகம் வெறுக்கிறதோ, ஒரு பெண் இப்படியெல்லாம் இருக்கவே கூடாது என தொடர்ந்து பாடம் எடுக்கப்படுகிறதோ, அதையெல்லாம் சேகரித்து ஒரு பெண் கதாபாத்திரத்தை 'ஸ்கெட்ச்' செய்திருக்கிறார் ருத்ரய்யா. அந்தப் பெண் கதாபாத்திரத்தை மையப்படுத்தியும், பெண்பாலை அடிப்படையாக கொண்டு படத்தின் தலைப்பையும் வைத்து மிரட்டியிருக்கிறார். அவரது மஞ்சு கதாபாத்திரம் காலம் கடந்தும் வியப்பை ஏற்படுத்துவது ஏன்? - வாருங்கள் 'தெறிப்புத் திரை'யின் முதல் அத்தியாயத்தில் அலசுவோம்.
கைவிடப்பட்ட காட்டில் சுற்றித் திரியும் மான் ஒன்று ஆறுதலைத் தேடி ஓடிக்கொண்டிருக்கிறது. ஓடி ஓடித் தேய்ந்த அதன் கால்கள், சூரியனின் வெம்மை தாழாமல் நிழலைத் தேடுகிறது. அகப்பட்ட நிழலருகில் மூச்சிறைத்து நின்றுகொண்டிருந்த அந்த ஆறுதல் தேடிய மானை, மாறுவேடம் தரித்த புலியொன்று ஏமாற்றி வேட்டையாடிவிடுகிறது. தொடர் வேட்டையாடல்களும், ஏமாற்றங்களும், ஆறுதலில்லா இந்த உலகின் அத்தனையும் அந்த மானுக்கு வெறுப்பையே உமிழ்கின்றன. அப்படியான ஓர் உலகம் தான் 'மஞ்சு' பிரவேசிப்பது. ஆணாதிக்கம் நிறைந்த அத்தியாயங்களால் எழுதப்பட்ட அவளின் உலகிற்குள் நம்மை கொஞ்சம் கொஞ்சமாக கைப்பிடித்து அழைத்துச் செல்கிறார் இயக்குநர் ருத்ரய்யா.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
8 mins ago
இந்தியா
6 mins ago
இந்தியா
45 mins ago
இந்தியா
49 mins ago
இந்தியா
58 mins ago
வணிகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
உலகம்
2 hours ago
வணிகம்
3 hours ago
சினிமா
3 hours ago