'தலைநகரம் 2' படப்பிடிப்பு தொடக்கம்

By செய்திப்பிரிவு

சுந்தர்.சி நடிக்கவுள்ள 'தலைநகரம் 2' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.

2006-ம் ஆண்டு இயக்குநர் சுந்தர்.சி நாயகனாக அறிமுகமான படம் 'தலைநகரம்'. சுராஜ் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் வடிவேலு, ஜோதிர்மயி, பிரகாஷ்ராஜ், போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் சுந்தர்.சியுடன் நடித்திருந்தனர். இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்தப் படத்தை ரைட் ஐ தியேட்டர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதன் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு இன்று (செப்டம்பர் 23) சென்னையில் தொடங்கப்பட்டது. இதில் சுந்தர்.சி உடன் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பதைப் படக்குழு இன்னும் அறிவிக்கவில்லை.

சுந்தர்.சி இயக்கத்தில் உருவான 'அரண்மனை 3' திரைப்படம் அக்டோபர் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதன் அனைத்து உரிமைகளையும் ரெட் ஜெயின்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

36 mins ago

தமிழகம்

57 mins ago

இந்தியா

43 mins ago

இந்தியா

1 hour ago

உலகம்

1 hour ago

வணிகம்

1 hour ago

சினிமா

2 hours ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

வாழ்வியல்

5 hours ago

மேலும்