நடிகர் வேணு அரவிந்த் நலமாக இருப்பதாக ராதிகா தெரிவித்துள்ளார்.
கோவை அனுராதா இயக்கிய ‘காஸ்ட்லி மாப்பிள்ளை’, ‘கிரீன் சிக்னல்’, கே.பாலசந்தர் இயக்கிய ‘காதல் பகடை’, ‘காசளவு நேசம்’ உள்ளிட்ட சீரியல்களில் நடித்தவர் வேணு அரவிந்த். அதனைத் தொடர்ந்து ராதிகாவின் ராடான் நிறுவனம் தயாரித்த ‘செல்வி’ சீரியலில் அவருடைய கதாபாத்திரம் நல்ல வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து ‘வாணி ராணி’, ‘அக்னி சாட்சி’, ‘சந்திரகுமாரி’ உள்ளிட்ட சீரியல்களில் நடித்திருந்தார். இது தவிர பல்வேறு திரைப்படங்களிலும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
அண்மையில் இவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுத் தொடர்ந்து நிமோனியா காய்ச்சல் பாதிப்பும் ஏற்பட்டு இரண்டிலிருந்து மீண்டுவிட்டதாகவும், சமீபத்தில் மூளையில் நடந்த அறுவை சிகிச்சையால் தற்போது மருத்துவமனையில் கோமாவில் இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின.
'வாணி ராணி' தொடரில் வேணு அரவிந்துடன் நடித்த இளம் நடிகர் அருண் குமார் ராஜன் இந்தச் செய்திக்கு நேற்று மறுப்பு தெரிவித்துத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் தற்போது நடிகை ராதிகாவும் தனது ட்விட்டர் பக்கத்தில் வேணு அரவிந்த் கோமாவில் இல்லை என்று பதிவிட்டுள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:
வேணு அரவிந்த் கோமா நிலையில் இருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருப்பது வருத்தத்தை தருகிறது. அவரது உடல்நலம் குறித்து அவரது மனைவியுடன் பேசி வருகிறேன். அவர் உடல்நிலை சரியில்லாமல்தான் இருந்தார். ஆனால் தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது. அவர் ஒரு அற்புதமான மனிதர். அவர் ஆரோக்கியமாக மீண்டு வரவேண்டும் என்று பிரார்த்திப்போம். தவறான செய்திகளை நிறுத்துங்கள்.
இவ்வாறு ராதிகா கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 mins ago
இந்தியா
8 mins ago
இந்தியா
22 mins ago
சினிமா
3 hours ago
இந்தியா
30 mins ago
கருத்துப் பேழை
3 hours ago
தமிழகம்
15 mins ago
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
4 hours ago
விளையாட்டு
8 hours ago
வணிகம்
9 hours ago
விளையாட்டு
9 hours ago