இயக்குநர் பாலா ட்விட்டர் தளத்தில் இணைந்துள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை வாழ்த்திப் பதிவிட்டு தனது முதல் ட்வீட்டை பகிர்ந்துள்ளார்.
'சேது', 'நந்தா', 'பிதாமகன்', 'நான் கடவுள்' என அடுத்தடுத்த படங்களில் தேசிய அளவில் கவனம் பெற்றவர் இயக்குநர் பாலா. 'நான் கடவுள்' படத்துக்காக சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதையும் வென்றவர். ஆனால் இதற்குப் பிறகு இவர் இயக்கிய எந்தப் படமும் அந்த அளவு வரவேற்பைப் பெறவில்லை. 'தாரை தப்பட்டை', 'நாச்சியார்' 'வர்மா' என அடுத்தடுத்து படங்கள் தோல்வியடைந்தன.
கடைசியாக உருவான 'வர்மா', தயாரிப்பாளருக்கு திருப்தியளிக்காத காரணத்தால், திரையரங்குகளில் வெளியாகவில்லை. ஓடிடி தளத்தில் வெளியாகி, கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. தற்போது ஜிவி பிரகாஷ் நடிப்பில் பாலா ஒரு படத்தை இயக்குவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் பாலா ட்விட்டர் தளத்தில் இணைந்துள்ளார். தனது முதல் ட்வீட்டாக, சமீபத்தில் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற திமுக தலைவர், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை வாழ்த்திப் பதிவிட்டுள்ளார்.
”மாண்புமிகு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு,
"தேவையற்ற வாழ்ததுரைகள் தெரிவிப்பதைத் தவிருங்கள்' என்று கேட்டுக்கொண்டீர்கள். ஆனாலும் இதைத் தவிர்க்க முடியவில்லை. தங்களின் ஆற்றல், செயல் மற்றும் பண்பான நடவடிக்கைகள் அனைத்தும் மனித நாகரிகத்தின் உச்சம்.
நன்றிகள்.
வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோனோக்கி வாழுங் குடி. (குறள்)”
என்று பாலா இந்த ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
தொழில்நுட்பம்
2 hours ago
விளையாட்டு
3 hours ago
சினிமா
4 hours ago
தமிழகம்
5 hours ago
விளையாட்டு
7 hours ago
இந்தியா
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
சினிமா
9 hours ago
இந்தியா
10 hours ago