நடிகர் குள்ளமணி சென்னையில் டிசம்பர் 25ம் தேதி இரவு காலமானார். அவருக்கு வயது 65.
நவாப் நாற்காலி என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகர் குள்ளமணி. இவரது இயற்பெயர் சுப்பிரமணி. வயது 65.
எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி வேடத்தில் நடித்து மிகவும் பிரபலமானவர். இவரது குள்ளமான தோற்றமே காமெடி காட்சிகளுக்கு மிகவும் பக்க பலமாக இருந்தது.
சுருளிராஜன், தேங்காய் சீனிவாசன், நம்பியார் உள்ளிட்ட நடிகர்களுடன் இணைந்து நாடகங்களில் நடித்து, அதன்பின் திரையுலகிற்கு வந்தவர். ’கரகாட்டக்காரன்' படத்தில் வரும் இவரது காமெடி காட்சி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.
கடந்த சில மாதங்களாக சிறுநீரக நோயினால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்றிரவு 9 மணிக்கு சிகிச்சை பலன் அளிக்காமல் காலமானார்.
அவரது உடல் சொந்த ஊரான புதுக்கோட்டை அருகே உள்ள மரமடக்கி கிராமத்துக்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு இன்று (டிசம்பர் 26) உடல் அடக்கம் நடைபெற இருக்கிறது. மறைந்த நகைச்சுவை நடிகர் குள்ளமணிக்கு ராணி என்ற மனைவியும், மகாலட்சுமி என்ற ஒரு மகளும் இருக்கிறார்கள்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
16 mins ago
தமிழகம்
40 mins ago
தமிழகம்
42 mins ago
தமிழகம்
50 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
45 mins ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
2 hours ago
உலகம்
3 hours ago
சினிமா
3 hours ago