சிம்பு - பாண்டிராஜ் படத்திற்கு நயன்தாராவை நாயகியாக ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.
பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு நடித்துவரும் படத்திற்கு, நாயகியாக யாரையும் ஒப்பந்தம் செய்யாமல் படப்பிடிப்பு நடத்தி வந்தார்கள். விரைவில் நாயகி ஒப்பந்தம் செய்யப்படுவார் என்று அறிவித்தார்கள்.
சிம்பு - பாண்டிராஜ் படத்தினை, சிம்பு தயாரிக்க, அவரின் தம்பி குறளரசன் இசையமைத்து வருகிறார். பாலசுப்பிரமணியெம் ஒளிப்பதிவு செய்ய, ப்ரவீன் எடிட்டராக பணியாற்றி வருகிறார்.
இப்படத்தின் நாயகியாக தற்போது நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். படத்திற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை.
'வல்லவன்' படப்பிடிப்பின் போது சிம்பு - நயன்தாரா இருவருமே காதலித்து வந்தார்கள். அதற்கு பிறகு கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தார்கள். பின்னர் சிம்புவோ, “நயன்தாராவுடன் இணைந்து நடிப்பது பற்றி எனக்கு கவலையில்லை. கதைக்கு தேவைப்பட்டால் நடிப்பேன்” என்று பேட்டியளித்தார்.
இந்நிலையில், சிம்பு - நயன்தாரா இருவருமே மீண்டும் நண்பர்களானார்கள். தற்போது மீண்டும் சிம்பு - நயன்தாரா இருவரும் சேர்ந்து நடிக்க தீர்மானித்திருப்பது தமிழ் திரையுலகினரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
சிம்பு படத்தின் நாயகியாக நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார் என்ற தகவலை இயக்குநர் பாண்டிராஜ், தனது ட்விட்டர் தளத்தில் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
விளையாட்டு
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
விளையாட்டு
8 hours ago
இந்தியா
9 hours ago
விளையாட்டு
10 hours ago
இந்தியா
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
ஜோதிடம்
11 hours ago