சென்னை: மறைந்த நடிகர் டேனியல் பாலாஜியின் கண்கள் தானம் செய்யப்பட்டுள்ளன. பிரபல நடிகர் டேனியல் பாலாஜி நேற்று வெள்ளிக்கிழமை (மார்ச் 29) இரவு காலமானார். மாரடைப்பு காரணமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்தார். அவருக்கு வயது 48. அவரது மறைவு செய்தி திரை உலகை துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
சின்னத்திரை மூலம் வெள்ளித்திரைக்குள் என்ட்ரி கொடுத்த நடிகர். தொடக்கத்தில் சிறு சிறு பாத்திரங்களில் நடித்து வந்தவருக்கு கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் வெளிவந்த ‘காக்க காக்க’ படத்தில் ஸ்ரீகாந்த் என்ற போலீஸ் பாத்திரத்தில் நடித்ததன் மூலம் கவனம் பெற்றார். பின்னர் ‘வேட்டையாடு விளையாடு’ படத்தில் வில்லனாக நடித்து அதீத கவனம் ஈர்த்தார்.
முன்னதாக தனது கண்களை தானம் செய்ய நடிகர் டேனியல் பாலாஜி முடிவெடுத்திருந்தார் என்று சொல்லப்படுகிறது. அதன்படி, அவர் மறைவை அடுத்து அவரது கண்கள் தானம் செய்யப்பட்டன. புரசைவாக்கத்தில் அவர் இல்லத்தில் உடல் வைக்கப்பட்டுள்ள நிலையில், மருத்துவர்கள் அங்கு வந்து கண்களை தானமாகப் பெற்றனர். இதையடுத்து “உயிரிழந்த பிறகும் அவர் மற்றவர்களுக்குப் பார்வையைத் தருகிறார்” என்று டேனியல் பாலாஜி குறித்து அவரது ரசிகர்கள் நெகிழ்ந்து வருகின்றனர்.
இதனிடையே, டேனியல் பாலாஜியின் உடல் புரசைவாக்கத்தில் வரதம்மல் காலனியில் உள்ள அவருடைய இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இயக்குநர்கள் வெற்றிமாறன், கவுதம் மேனன், அமீர் ஆகியோர் டேனியல் பாலாஜி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இன்று மாலை டேனியல் பாலாஜியின் உடல் தகனம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
17 mins ago
விளையாட்டு
44 mins ago
தமிழகம்
38 mins ago
க்ரைம்
39 mins ago
உலகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
சினிமா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
சினிமா
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago