மம்மூட்டியிடம் அதிகம் கற்றுக்கொண்டேன் - ரம்யா பாண்டியன்

By செய்திப்பிரிவு

மம்மூட்டி நடிப்பில் லிஜோ ஜோஸ் இயக்கியுள்ள படம், ‘நண்பகல் நேரத்து மயக்கம்’. ரம்யா பாண்டியன், நமோ நாராயணன், ராமச்சந்திரன், அஸ்வத் உட்பட பலர் நடித்துள்ள இந்தப் படம் மலையாளத்தில் கடந்த 19ம் தேதி வெளியானது. தமிழில் இன்று வெளியாகிறது.

படம் பற்றி ரம்யா பாண்டியன் கூறியதாவது: இந்தப் படத்தில் பூங்குழலி என்ற கதாபாத்திரத்தில், தமிழ்ப் பெண்ணாக நடிக்கிறேன். நடிக்க வாய்ப்புள்ள பாத்திரம். இதில் நடித்துள்ள அனைவருக்குமே கதையில் முக்கியத்துவம் உண்டு. இது எனக்கு முதல் மலையாளப் படம் என்றாலும் மம்மூட்டியுடன் நடித்தது சிறந்த அனுபவம். அவரிடம் நிறைய கற்றுக்கொள்ள முடிந்தது. இந்தப் படத்தின் கதை, பின்னணி இசை, பாடல்கள் என அனைத்தும் புதுமையாக இருக்கும்.

நான் நடித்த ‘ஜோக்கர்’ படம் பார்த்துவிட்டு, அவர் மனைவியாக நடிக்க என்னை அழைக்கச் சொல்லி இருக்கிறார் மம்மூட்டி. அவர்கள், அந்தப் படத்தின் இன்னொரு கேரக்டரில் நடித்த நடிகையை அழைத்துச் சென்றுவிட்டார்கள். பிறகு அவரையே அதில் நடிக்க வைத்ததாக, மம்மூட்டி என்னிடம் சொன்னார். இது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அடுத்து கணேஷ் விநாயக் இயக்கும் படத்தில் நடிக்கிறேன். இவ்வாறு ரம்யா பாண்டியன் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

29 mins ago

வாழ்வியல்

2 hours ago

க்ரைம்

57 mins ago

இந்தியா

1 hour ago

சினிமா

4 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

சினிமா

5 hours ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

மேலும்